Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஎனக்கு ரொம்ப பிடிக்கும்..! சிம்பு உடன் தொடர்பு.. ஜோதிகா சொன்ன ரகசியம்

எனக்கு ரொம்ப பிடிக்கும்..! சிம்பு உடன் தொடர்பு.. ஜோதிகா சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பாக் கொடுத்திருந்தார் நடிகர் சிம்பு . நீண்ட நாட்கள் இடைவெளி இருந்தாலும் அதை கொஞ்சம் கூட ரசிகர்கள் நினைக்கவில்லை இப்போதும் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

அவரை இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவர் இயற்கையில் நல்ல குணம் உள்ள ஒரு நடிகராவார். திரைப்படங்களில் அவர் நடிப்பில் நிறைய காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அதுவெல்லாம் அவருக்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கும் இவரின் காதல் காட்சிகளுக்கு இன்ஸ்பயர் ஆகி நிறைய ஆண் ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களை நடித்துக் கொண்டு வருகிறார் .இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 48வது திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இது மிகவும் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு தன் உடலை வருத்திக்கொண்டு பல கலைகளையும், உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொண்டு வருகிறார் .

- Advertisement -

இதற்காக இவர் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று பல தகவல்கள் ஆரம்பத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது .தன் உடலை சினிமாவிற்காக மெருகு ஏத்தி அழகாகி வரும் நடிகர் சிம்பு தற்போது நிஜ வாழ்விலும் பலருக்கு இஸ்ரேரேஷனாக மாறிவிட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சிம்புவை பற்றி நடிகை ஜோதிகா ஒரு செய்தியை கூறியிருக்கிறார்.நடிகை ஜோதிகா தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையிலும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு பல உடற்பயிற்சிகளை செய்து வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது .
அவர் பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவே மாறிவிட்டார் அப்படிப்பட்ட ஜோதிகாவிடம் சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி எடுக்கப்பட்டது அதில் நடிகர் சிம்புவை பற்றி அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது .

நடிகர் சிம்புவுடன் நடிகை ஜோதிகா மன்மதன் ,சரவணன் போன்ற திரைப்படங்களை கதாநாயகியாக நடித்திருக்கிறார் மேலும் கடைசியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அண்ணன் மனைவியாக நடித்திருந்தார் நடிகை ஜோதிகா.

இதில் நடிகை ஜோதிகாவும் சிம்புவும் இணைந்து நடித்த மன்மதன் திரைப்படத்தின் ஒரு புகைப்படத்தை காட்டிய போது நடிகை ஜோதிகா நான் இதுவரை இணைந்து நடித்த நடிகர்களில் சிம்பு என்னை விட இளமையானவர் எனக்கு அவருடைய வெளிப்படையான பேச்சு ரொம்ப பிடிக்கும் .அவர் எப்பொழுதும் மனதில் பட்டதை பேசி விடுவார். நான் இன்னும் அவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை நான் மறக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சிம்புவிற்கு நடிகை ஜோதிகா போன்ற நடிகைகள் பேனாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

Most Popular