Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாஸ்ரீவித்யா தான் என் காதலி..! கண்ணீர் மல்க பேசிய உலகநாயகன் கமலஹாசன்..!

ஸ்ரீவித்யா தான் என் காதலி..! கண்ணீர் மல்க பேசிய உலகநாயகன் கமலஹாசன்..!

70’s,80 ‘s என்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகர்கள் எண்ணில் அடங்காதவர்கள். ஆனால் அதில் இன்று வரை பெயர் சொல்லி இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,கமலஹாசன் போன்ற சிலர் மட்டுமே இன்னும் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இவர்கள் அப்பொழுது இருந்து பல ரசிகர்களை தன்வசப்படுத்திய  பெருமைக்கு உரியவர்கள் இதில் உலக நாயகன் கமலஹாசன் அன்றிலிருந்து ரசிகர்களால் காதல் மன்னன் என்ற செல்ல பெயருக்கு உரியவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது அதில் கலந்து கொண்டார். அவரிடம் சில கேள்விகளை கேட்டு அதற்கு அவர் கூறும் பதில்களை வைத்து அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துவது தான் அந்த நிகழ்ச்சியில் வழக்கம்.

அந்த அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலஹாசனிடம் தொகுப்பாளர் டிடி ஒரு புகைப்படத்தை காட்டி இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது என்று கேட்டார். அது 19 வயதான கமலஹாசனும் ஸ்ரீ வித்யாவும் நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் உடைய புகைப்படம் ஆகும். அதை பார்க்கும் பொழுது அவர் கண்களில் கண்ணீருடன் ஒரு ஏக்கமும் ஒரு சோகமும் அதை மீறிய காதலும் வெளிப்பட்டது அந்த கண்களுடன் பேசத் தொடங்கினார் உலகநாயகன்.

- Advertisement -

இது திரைப்படம் எடுக்கும் பொழுது எனக்கு 19 வயது இந்த புகைப்படத்தில் இருப்பது அன்பு தோழியா என்று டிடி கேட்டதற்கு இல்லை இல்லை என் காதலி என்று பகிரங்கமாகவே கூறுவேன் என்றார். அந்த கதையில் வந்த கதாபாத்திரங்களை தாண்டி தானாக அமைந்தது எங்களுக்குள் காதல் .எல்லா காதலும் திருமணத்தில் முடிய வேண்டுமென்று அவசியம் இல்லை என்றும் அந்த காதலை மனதில் அப்படியே இருக்கிறது என்றும் கூறினார் உலக நாயகன்.

- Advertisement -

எத்தனையோ சினிமாக்களில் உண்மையான ஆண்மகன் என்றால் ஒரு பெண்ணை காதலிப்பதை  பகிரங்கமாக பிறரிடம் கூறும் தைரியம் இருக்க வேண்டும் என்று பல வசனங்கள் வரும். அந்த வகையில் தன்னை ஆண்மகன் என்று நிரூபித்து இருக்கிறார் உலகநாயகன் கமலஹாசன் திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின்பும் ஒரு தொலைக்காட்சி பெட்டியில் வெளிப்படையாக தன் முதல் காதலையும் இன்றும் அந்த காதல் என் மனதில் நிற்கிறது என்பதையும் கூறும் தைரியம் எத்தனை பேருக்கு வரும். தன் காதலுக்கு நேர்மையாக இருந்த உலக நாயகன் ரியல் ஹீரோ தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல் காதல் தோற்றுவிட்டால் எத்தனையோ பேர் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் .அவ்வாறு இல்லை காதல் என்பதற்கு இவருடைய காதல் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. காதலுக்கு எந்த நிலைமையிலும் உண்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது எத்தனை காலம் வாழ்ந்தாலும் காதலையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அழகாக வாழ்ந்திருக்கிறார் உலகநாயகன்.

இந்த காணொளியை கண்ட பலரும் உலகநாயகனின் கண்களில் தெரிவது உண்மையான காதல் அதில் உள்ள ஏக்கம் பரிதவிப்பு இவை அனைத்தும் அந்த கண்கள் படம் போட்டு காட்டுகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்.

Most Popular