Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ திரைப்படம் செய்த தவறை கங்குவாவில் செய்ய மாட்டோம்...! தாமதமாவதற்கு இதுதான் காரணமா..?

லியோ திரைப்படம் செய்த தவறை கங்குவாவில் செய்ய மாட்டோம்…! தாமதமாவதற்கு இதுதான் காரணமா..?

தமிழ் சினிமாவில் தற்போது வரிசையாக வெளியிடுவதற்கு தயாரான நிலையில் இருக்கும் திரைப்படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் என்றால் அது நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து 3d வேலைகளும் கிராபிக்ஸ் பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது வெளியிடப்படும் என்று எல்லா ரசிகர்களும் கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு தற்பொழுது படக்குழுவில் இருந்து பதில் வந்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் 3d வேலைகளிலும்,  கிராபிக்ஸ் பணிகளிலும 1% கூட குறை இருந்து விடக் கூடாது .இந்த திரைப்படத்தின் 3d மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் சர்வதேச அளவில் இருந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்
அதனால்தான் இந்தத் திரைப்படம் எப்பொழுது வெளியிடப்பட போகிறது என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டால் அந்த அழுத்தத்திலேயே அதற்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என்று வேகமாக வேலை பார்க்கும் பொழுது ஏதாவது குறைகள் நேர வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதுவரை வெளியிடப்படும் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் .

- Advertisement -

மேலும் நாங்கள் இந்த அளவிற்கு சுதந்திரம் தருவதால் இயக்குனர் சிவாவும் ஒவ்வொரு நிமிடத்தையும் கருத்தில் கொண்டு துல்லியமாக வேலை செய்து வருகிறார்கள் என்று படக்குழுவினர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டு வெளிவந்த லியோ திரைப்படம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே வெளியிடப்பட போகும் தேதியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிரங்கமாக வெளியிட்ட பின்பு தான் திரைப்படத்தை இயக்கினார். அவர்களுடைய இலக்கு திரைப்படத்தின் வெற்றியை விட சொன்ன தேதியில் வெளியிட வேண்டும் என்பதுதான் அதிகமாக இருந்தது .

அதனால் கூட திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஒருவேளை பொறுமையாக திரைப்படத்தை இயக்கியிருந்தார் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு தெளிவாக லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கலாம். அந்தத் தவறை கங்குவா திரைப்படத்தில் செய்து விடக்கூடாது என்பதால்தான் திரைப்படகுழுவினர்கள் இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி கொண்டே செல்கிறார்கள். திரைப்படம் இவர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்ய போகிறது என்பதை வெளியிட்டுருக்கு பிறகு தான் பார்க்க முடியும்.

Most Popular