சினிமா

எப்பா.. பொன்னியின் செல்வன் வசூலை மிஞ்சிய ‘காந்தாரா’! – ஆச்சர்யத்தில் திரையுலகினர்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் “பொன்னியின் செல்வன்” வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சோழர்களின் கதை என்பதால் பார்வையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும் ஹிந்தியில் சுமார் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.

Advertisement

அதேநேரம் பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்க நாடுகளில் எதிர்பார்ப்பையும் மீறி நல்ல வசூலை பெற்றிருந்தது. அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் மிகுந்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் கால் பதித்து இருந்தது.

கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி கன்னட இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த படம் ‘காந்தாரா’ வெளிவந்தது முதலில் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் நுழையவில்லை. காந்தாரா படம் வெளியான தினத்தில் பொன்னியின் செல்வன் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை.

Advertisement

வித்தியாசமான கதைக்களம் அது சொல்லப்பட்ட விதம் என நேர்மைறையான விமர்சனங்களால் தினந்தோறும் புதுப்புது ரசிகர்களை தியேட்டர்களுக்குள் இழுத்தது.

இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்த படம் தெலுங்கில் 30 கோடியும் ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை விட அதிகமாக பெற்றிருக்கிறது காந்தாரா.

தெலுங்கில் காந்தாரா படம் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் 15 கோடி வரை லாபத்தை ஈட்டி உள்ளது. தற்போது தியேட்டர்களில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top