பொழுதுபோக்கு

ராஜு முருகன் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் கார்த்தி ஹீரோ விஜய் சேதுபதி வில்லன் – சத்தமே இல்லாமல் கசிந்த படத்தின் டைட்டில்

குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி என ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ராஜுமுருகன். அடுத்ததாக அவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. கார்த்தியை கதாநாயகனாக வைத்து அவர் கூடிய விரைவில் ஒரு படம் இயக்க உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி வில்லனாக கார்த்திக் ஹீரோவாக

Advertisement

இத்திரைப்படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க போவதாக தகவல் உறுதியாக உள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு “ஜப்பான்” என்கிற பெயர் வைக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. கூடிய விரைவில் இது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் நமக்கு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கப் போவதால் ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் விருமன் திரைப்படமும், செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படமும், தீபாவளி அன்று சர்கார் திரைப்படம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மறுபக்கம் விஜய் சேதுபதி இந்த ஆண்டு கடைசி விவசாயி, காத்துவாக்குல இரண்டு காதல், விக்ரம், மாமனிதன் என நான்கு திரைப்படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான்கு திரைப்படங்களும் அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்திலும், இரண்டு பாலிவுட் திரைப்படத்தில் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top