Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் மகனைத் தொடர்ந்து நெல்சனுடனும் கூட்டணி… கதாநாயகி பிரியங்கா மோகனாம்… கவின் காட்டில் அடை மழைதான்...

விஜய் மகனைத் தொடர்ந்து நெல்சனுடனும் கூட்டணி… கதாநாயகி பிரியங்கா மோகனாம்… கவின் காட்டில் அடை மழைதான் போங்க…

நடிகர் கவின் தற்போது பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த படத்தின் கதையை தனுசுக்காகத்தான் இயக்குனர் எழுதினாராம். இதில் தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவிக்க, கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அது நடக்காமல் போனது.

- Advertisement -

இதன் பிறகு, தனது முதல் திரைப்படம் ஆன பியார் பிரேமா காதல் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாணை வைத்தே திரைப்படத்தை இயக்க இளன் திட்டம் தீட்டினார். இதற்கான போட்டோ சூட்டும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் ப்ராஜெக்ட் தடைபட்டு போனது. இந்த நிலையில் தான் மூன்றாவது முறையாக கவினிடம் ஸ்டார் போய் சேர்ந்து இருக்கிறது.

டாடா படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் கவினுக்கு, இந்த திரைப்படம் மேலும் புகழை சேர்க்கும் என பலர் கூறி வருகின்றனர். இந்த திரைப்படம் போக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்திலும் கவின் நடிக்க தயாராகி வருகிறார். இதற்கான சூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இதுபோக, இயக்குனராக அறிமுகமாக இருக்கும் விஜய் மகன் ஜேசன் விஜயும், தனது கதையின் நாயகனாக கவினை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சின்னத்திரையில் சீரியல் மூலம் அறிமுகம், பிறகு பிக் பாஸில் வலம் வந்தது என கவினுக்கு நல்ல ரீச் இருந்ததாலேயே, வெள்ளித்திரையில் மிக சுலபமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல், கவின் நடிப்பில் உருவான டாடா திரைப்படம், அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இதனால் வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்க, கவின் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிப்பிலும், கவின் திரைப்படம் ஒன்றில் நடிப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கும் திரைப்படத்தில் கவின் நாயகனாக ஆவதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர் இயக்கம் படத்தை தானே தயாரிக்கவும் நெல்சன் முடிவு செய்துள்ளாராம். இதில் வழக்கம்போல அனிருத் இசையமைக்க, பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாக பேசப்படுகிறது. இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாம். இந்த தகவலால் ஆச்சரியம் அடைந்துள்ள ரசிகர்கள், இனி கவின் காட்டில் மழை தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular