Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentசென்னையில் சொந்த வீடு வாங்கிய நடிகை.. தளபதி நடிக்கும் கடைசி படத்தின் நாயகியாக நடிக்க தீவிரம்.....

சென்னையில் சொந்த வீடு வாங்கிய நடிகை.. தளபதி நடிக்கும் கடைசி படத்தின் நாயகியாக நடிக்க தீவிரம்.. கீர்த்தி சுரேஷ் பிளான் நடக்குமா?

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அதேபோல் விஜயுடன் பைரவா, தனுஷுடன் தொடரி, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வியக்க வைத்தார்.

- Advertisement -

அதேபோல் தெலுங்கிலும் பவன் கல்யாண், நானி, மகேஷ் பாபு உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவரது சினிமா வாழ்க்கையில் ”மகாநடி” திரைப்படம் மைல்கல் படமாக அமைந்தது. இதன் மூலமாக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பான் இந்தியா நாயகியாக வலம் வரத் தொடங்கினார்.

தொடர்ந்து உடல் எடையை குறைத்து பாலிவுட்டிற்கு ரெடியான நிலையில், அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்கள் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுவும் வளர தொடங்கியது.

- Advertisement -

தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அதேபோல் பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலமாக மீண்டும் பழைய மார்க்கெட் கீர்த்தி சுரேஷ் தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது சென்னையில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஈசிஆரில் கீர்த்தி சுரேஷ் பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்துள்ள நிலையில், விஜய் நடிக்கும் கடைசி படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஆர்வமாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Most Popular