Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeEntertainmentராக்கி பாய் மீண்டும் வருவது நிச்சயம்.. சலார் -2க்கு முன்பே வரும் கேஜிஎஃப் - 3.....

ராக்கி பாய் மீண்டும் வருவது நிச்சயம்.. சலார் -2க்கு முன்பே வரும் கேஜிஎஃப் – 3.. பிரசாந்த் நீல் கொடுத்த அப்டேட்!

கன்னட சினிமாவில் இருந்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகிய கேஜிஎஃப் திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. திரையரங்குகளில் வெளியாகி வசூல் செய்ததை விடவும் அமேசான் மற்றும் கேபிள் டிவி-க்களில் வெளியாகி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. படத்தில் ராக்கி பாயாக தோன்றி யாஷ் பேசிய வசனங்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

- Advertisement -

இதனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் கேஜிஎஃப் படம் வெளியாகி சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது. கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் யாஷை பான் இந்தியா ஹீரோவாகவே கொண்டாடினார்கள்.

அதுமட்டுமல்லாமல் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ராக்கி பாய் சாவது போல் காட்டப்பட்டாலும்,. கேஜிஎஃப் 3ஆம் பாகம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. கேஜிஎஃப் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படாமல், இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார்.

- Advertisement -
KGF 2

சலார் படமும் கேஜிஎஃப் பகுதியில் நடக்கும் கதையாக பின்னப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சலார் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 3ஆம் பாகம் மற்றும் சலார் படத்தின் அடுத்த பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில், சலார் படம் வரும் செப்.30ஆம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும். அதேபோல் அடுத்ததாக சலார் 2 படத்தை எடுக்காமல், கேஜிஎஃப் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இதனால் நிச்சயம் சலார் 2 படத்திற்கு முன்பாகவே கேஜிஎஃப் 3ஆம் பாகம் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Most Popular