Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentமாவீரன் ஒரு ஃபேண்டசி திரைப்படம்.. வேறு மாதிரி நடித்திருக்கிறேன்.. கதையை உடைத்த சிவகார்த்திகேயன்!

மாவீரன் ஒரு ஃபேண்டசி திரைப்படம்.. வேறு மாதிரி நடித்திருக்கிறேன்.. கதையை உடைத்த சிவகார்த்திகேயன்!

மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னர் நடித்த பிரின்ஸ் படம் தோல்வி அடைந்த தோல்விக்கு மாவீரன் மூலம் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் சூழலில் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளன. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

- Advertisement -

மடோன் அஸ்வின் பற்றி சிவகார்த்திகேயன்

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “மடோன் அஸ்வின் எடுத்த படம் அனைத்தும் சென்சிட்டிவான கதைகள். ஆனால் அதை  ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்துகொண்டு பணியாற்றியிருக்கிறார். படப்பிடிப்பில் ஒரு நாள்கூட யாரையும் அவர் திட்டியது இல்லை. ஆனால் அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் மாவீரன் படம் இருக்காது.  வேறு பாதையில் நடித்துள்ளேன்.

இந்தப் படம் ஒரு ஃபேண்டசி படம் . தயாரிப்பாளர் பணம் அளிப்பவர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரின் மனதில் இருக்கும் கதையை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என யோசிப்பவர்” என்றார். மேலும் பேசிய அவர், படங்கள் இயக்குவது என்பது மிக மிகக் கடுமையான பணி. எனக்கு படங்கள் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ அப்போது படம் இயக்க தொடங்குவேன் என தெரிவித்தார்.

- Advertisement -

டிக்கெட் விலை உயர்வு

அதனைத் தொடர்ந்து, திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவா, திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு நடிகனாக நான் பார்ப்பது தான். என்னுடைய படம் மக்களிடம் சரியாக செல்கிறதா அவர்களுக்கு பிடித்தது போல் இருக்கின்றதா என்பது மட்டும்தான்” என்றார்.

- Advertisement -

ஒழுக்கமான நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து மிஷ்கின் பேசுகையில், “மாவீரன் படம் மிக மகிழ்ச்சியான ஒரு பயணம் , மடோன் அஸ்வின் என்னிடம் வந்து கதை கூறியது பெரிய ஆச்சரியம். இவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி.  நான் சினிமா துறையில் 23 வருடங்களாக உள்ளேன். என்னை போல் சிவகார்த்திகேயனும் ஒழுக்கமானவர்.

மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

இரவு முழுவதும் தன்னுடன் நடித்த சண்டை கலைஞர்கள் காயப்பட்டால் சிவகாரத்திகேயன் அவர்களிடம் ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்பார். அதை வைத்துட் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல மனிதர் என நான் அறிந்தேன். மாவீரனில் என் கதாப்பாத்திரம் ஒரு வில்லனாகவும் , என் நிஜ வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது” என்றார். மாவீரனில் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular