Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாசிவா தன்னையே மீண்டும் கண்டுபிடித்துள்ளார்.. கங்குவா குறித்து மதன் கார்க்கே பேச்சு

சிவா தன்னையே மீண்டும் கண்டுபிடித்துள்ளார்.. கங்குவா குறித்து மதன் கார்க்கே பேச்சு

நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படம் தான் அவருடைய ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புடன்  வைத்திருக்கும் திரைப்படமாகும். இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

10 மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் அதிக வருமானத்தை இந்த படம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக 3டி தொழில்நுட்பத்தில் வர உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தில் வசன கர்த்தாவாக மதன் கார்கே பணியாற்றியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் சிவாவின் முந்தைய படங்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் அதற்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. இது முற்றிலும் வேறு மாதிரியாக கதைகளத்தை கொண்டு இருக்கும். ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சிறுத்தை சிவா தன்னையே மீண்டும் கண்டுபிடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

வசனத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் படத்தின் கதையும் காட்சிகளும் நீங்கள் நினைக்க முடியாத அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது.
படத்தின் சில காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

இந்தப் படத்தில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பும் கதையை சிறுத்தை சிவா கையாண்ட விதமும் புதுமையாக ரசிகர்களுக்கு இருக்கும். வசனமும் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. உங்களை போலவே நானும் இந்த படத்தை காண ஆவலுடன் இருக்கின்றேன் இன்று மதன் கார்கே கூறியுள்ளார்.

Most Popular