Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅதுக்குள்ள இவ்வளவு பெரிய பசங்களா... குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா.. !

அதுக்குள்ள இவ்வளவு பெரிய பசங்களா… குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா.. !

நானும் ரவுடி தன் படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அப்படத்தில் நடித்த நயன்தாரா இருவரும் காதலில் விழுந்தனர். பல ஆண்டுகள் லிவ் இன் வாழ்க்கைய மேற்கொண்டு வந்த அவர்கள் சென்ற ஆண்டு மிகவும் குறைந்த விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

- Advertisement -

அதனுடன் சில் மாதங்களிலேயே அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வழக்கம் போல் சிலர் எதிர்த்தனர், ஆனால் இன்றைய உலகில் இதெல்லாம் சாதாரணமே.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் மற்றும் உலக் தெய்வக் எனப் பெயரிட்டனர். பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும் சுருக்கமாக பாசமாக உயிர் மற்றும் உலகம் என அழைக்கின்றனர்.

- Advertisement -

கேரளாவில் பிறந்த நயன்தாரா அனைத்து ஆண்டும் தவறாமல் ஓணம் பண்டிகையை அங்கு கொண்டாடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வார். இந்த முறை குழந்தைகளுடன் முதல் முறையாக கொண்டாடியுள்ளார். வழக்கம் போல போஸ்ட் வைரல் ஆனது.

- Advertisement -

புகைப்படங்களில் குழந்தைகளின் முகத்தை அவர்கள் காட்டவில்லை. இருவரும் இரு குழந்தைகளை கொஞ்சும் படம் மட்டுமே வெளியானது. அதில் குழந்தைகள் 4 வயது ஆனது போல் பெரிதாக தெரிந்தனர் என்ற பேச்சு தான் இன்று ட்ரெண்ட். ஒரு வருடம் தான் ஆகிறது அதற்குள் எப்படி என்ற ஆச்சர்யம் புகைப்படத்தை பார்த்த அனைவருக்கும் வரும்.

முகத்தைப் பார்த்தால் அந்த சந்தேகம் வராது எனத் தெரிகிறது. இதோடு காதலில் மலர்ந்துள்ள இந்த ஜோடி ஒன்றாக மற்றொரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளனர். குடும்பமாக அவர்கள் சந்தோசமாக உள்ளனர்.

Most Popular