Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeUncategorizedகோலிவுட்டில் எனக்கு பாலியல் தொல்லை தந்தார்கள்.. யார் என்ன செய்தது.. நித்யா மேனன் விளக்கம்.. !

கோலிவுட்டில் எனக்கு பாலியல் தொல்லை தந்தார்கள்.. யார் என்ன செய்தது.. நித்யா மேனன் விளக்கம்.. !

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வலம் வந்த நாயகி & பாடகி நித்யா மேனன். தமிழில் ஓகே கண்மணி, காஞ்சனா, 24, மெர்சல் என பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கூட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் செய்த தேன்மொழி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

இன்று நித்யா மேனன் அவர்கள் நேர்காணல் ஒன்றில் திடிக்கிடும் தகவல் ஒன்றினை கூறியதாக செய்திகள் உலாவின. அதாவது கோலிவுட்டில் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை தந்தார் என நித்யா மேனனே கூறியதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தச் செய்தி முற்றிலும் பொய் எனக் கூறி அதனை மறுத்துள்ளார். இதுவரை அவர் இது போன்ற எந்த ஒரு இன்னல்களையும் சந்தித்ததில்லை எனவும் கூறியிருக்கிறார். இந்த வதந்தி நித்யா மேனனுக்கே தெரியவில்லை. அவரின் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து பேசியதை டுவீட் செய்துள்ளார்.

- Advertisement -

சினிமா துறையில் கிசு கிசுகள் வருவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் இது போன்ற உணர்திறன் செய்திகள் நிராகரிக்கப்பட வேண்டியவை. சமீபத்தில் இளம் நடிகை கிரித்தி ஷெட்டியை வைத்துக் இது போல வதந்திகளை பரப்பினர்.

- Advertisement -

நித்யா மேனன் சொல்லாத விசியத்தை வைரல் ஆகி அதற்கு பலியாடாக அவருடன் நடித்த நடிகர்களை சம்பந்தப்படுதிப் பேசத் துவங்கிவிட்டது ஓர் கும்பல். கடைசியாக நித்யா மேனனின் தமிழ் படத்தில் நடித்த தனுஷ் பெயரை தான் அதிகம் பயன்படுத்தி கேலி செய்கின்றனர். அடுத்தப் பெயர் மெர்சல் படத்தில் வந்த தளபதி விஜய். நித்யா மேனன் இதனை பொய் என உடனே சொல்லியது மிகவும் நன்மையான ஒன்று.

Most Popular