Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் திரைக்கு வருகிறது பொன்னியின் செல்வன்? எந்த தேதி தெரியுமா?

மீண்டும் திரைக்கு வருகிறது பொன்னியின் செல்வன்? எந்த தேதி தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டு பெரும் சாதனை படைத்தது பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம். இயக்குனர் மனிதரத்னத்தின் நீண்ட கால கனவு திரைப்படமான பொன்னியன் செல்வனின் இரண்டாவது பாகம் இம்மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகிறது.

இந்தத் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,சரத்குமார் ரகுமான், பார்த்திபன், நடிகை திரிஷா ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி ,சோபிதா போன்ற  நட்சத்திர பட்டாளமே ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

திரைப்படத்தின் மீது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் நிறைந்திருந்தது. இது எழுத்தாசிரியர் கல்கியால் எழுதப்பட்ட ஒரு காவியம் என்பதால் இதை படித்த பலர் இதை திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தார்கள்.

- Advertisement -

இது ஒரு பெரிய நாவல் என்பதால் இது இரண்டு பாகங்களாக பிரித்து படமாக்கி இருக்கிறார்கள். அதில் வருகின்ற 28ஆம் தேதி 2வது பாகம்  திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முதல் வாரமான ஏப்ரல் 21 ஆம் தேதி திரைப்படத்தின் முதல் பாகத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதுவரை பார்க்க தவறியவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இத்திரைப்படத்தினுடைய முதல் பாகத்தை பார்க்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த முடிவை இவர்கள் எடுத்து இருப்பார்கள்.

முதல் பாகத்தை தெளிவாக பார்த்தால் தான் இரண்டாவது பாகத்தின் கதை புரியும் என்பதற்காகவும் இந்த முடிவை படக்குழுவினர்கள் எடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இது ரசிகர்களுக்கு நல்ல வாய்ப்பு. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய முதல் பாகம் அடைந்து வெற்றியை போல் பல மடங்கு அதிகமாகவே இரண்டாவது பாகத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

Most Popular