Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentபிரபுதேவாவின் பெண் குழந்தைக்கு நயன்தாரா எனப் பெயரா?… இன்னும் முன்னாள் காதலியை மறக்கவில்லையா என கேள்வி...

பிரபுதேவாவின் பெண் குழந்தைக்கு நயன்தாரா எனப் பெயரா?… இன்னும் முன்னாள் காதலியை மறக்கவில்லையா என கேள்வி கேட்கும் ரசிகர்கள்

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடன இயக்குனர், நடிகர் பிரபுதேவா

இந்திய சினிமாவில் நடன இயக்குனர்களில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் பிரபுதேவா. தனக்கே உரித்தான நடன அசைவுகளின் மூலம் இளைஞர்களை கட்டிப்போட்ட பிரபுதேவா, சினிமாவில் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் மட்டும் தோன்றிய பிரபுதேவா, ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாட்டின் மூலம் பட்டித் தொட்டி என்னும் பேசப்பட்டார். இதன் விளைவாகவே இயக்குனர் சங்கருடன் இணைந்து காதலன் படத்தில் நடித்தார் பிரபுதேவா. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வந்த அவர், லவ் பேர்ட்ஸ் மின்சார கனவு, விஐபி, காதலா காதலா, வானத்தைப்போல, பெண்ணின் மனதை தொட்டு, மனதை திருடி விட்டாய், அள்ளித்தந்த வானம், எங்கள் அண்ணா உள்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பலரால் பேசப்பட்டார்.

- Advertisement -

பிரபுதேவாவின் இயக்குனர் அவதாரம்

சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு விட்டிருந்த பிரபுதேவா, திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படமாக நடிகர் விஜயுடன் இணைந்து அவர் எடுத்த போக்கிரி திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது. 2007ல் வெளியான அந்த திரைப்படம் விஜயின் திரை பயணத்தில் முக்கிய இடத்தை பிடிக்க, பிரபுதேவாவும் முதல் படத்திலிருந்து முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் பிசியான அவர், மீண்டும் விஜயை வைத்து வில்லு படத்தை எடுத்தார். கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம், தோல்வி படமாக அமைந்தது. தொடர்ந்து விஷாலை வைத்து அவரிடத்தை வெடி திரைப்படம் நமத்து போனது.

நயன்தாராவுடன் காதல்

இந்த நிலையில் வில்லு படபிடிப்பின் போது நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. பிரபுதேவாவுடன் பழகுவதை வெளிப்படையாக நயன்தாரா பழங்கியதால் இருவரும் சேர்ந்தே வாழ்வார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே ரம்லத் என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்த பிரபுதேவா, அவரை விவாகரத்து செய்தார். இதேபோல் நடிகை நயன்தாராவும் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் காலப்போக்கில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பிரிந்தனர். இருவரும் அவர்களுக்கே உண்டான தனித்தனி பாதையில் செல்ல விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அவரைக் கரம் பிடித்தார் நயன்தாரா. இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

இந்நிலையில் பிரபுதேவாவும் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் முந்தைய காலகட்டங்களை போல் அவருக்கு எந்த படமும் கைகூடவில்லை. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை கரம் பிடித்தார் பிரபுதேவா. ஏற்கனவே முதல் மனைவி மூலம் மூன்று மகன்களுக்கு தந்தை ஆன பிரபுதேவா, தனது 50 வது வயதில் ஹிமானி சிங் மூலம் பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்த நிலையில் தனது மகளுக்கு நயன்தாரா என அவர் பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உண்மை என்ன?

இந்த தகவலால் ஆடிப் போன ரசிகர்கள் இன்னும் அவர் பழசை மறக்கவில்லை போல என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிரபுதேவா தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைக்க வாய்ப்பே இல்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரபுதேவாவின் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular