Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயகாந்த் முகத்தை பச்சை குத்திய பிரேமலதா பாசமா அரசியலா

விஜயகாந்த் முகத்தை பச்சை குத்திய பிரேமலதா பாசமா அரசியலா

நடிகரும் அரசியல்வாதியுமான  விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

தே.மு.திகா கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் நீண்ட நாட்களாகவே உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டார். கட்சியிலும் அவருடைய சொந்த வாழ்விலும் உறுதுணையாக இருந்தது அவர் மனைவி பிரேமலதா தான்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அவருக்கு முழு துணையாக இருந்து அவரை பாதுகாத்து வந்தார். அவரை அவர் பார்த்துக் கொள்ளும் பல வீடியோக்கள் அப்பொழுது இணையத்தில் பரவி வந்தது அதை நாமே கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

அவர் மறைந்த பிறகு தற்பொழுது அவர் ஆரம்பித்த கட்சிக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்று வழி நடத்தி வருகிறார் .இந்நிலையில் இவர் தற்பொழுது மறைந்த தன் கணவரின் நினைவுகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவருடைய கையில் கேப்டன் விஜயகாந்தின் முகத்தை பச்சை குத்தி இருக்கிறார் பிரேமலதா.

- Advertisement -

இது மக்களை நெகிழ வைத்திருக்கிறது ஒரு மனைவி தன் கணவரை எப்படி எல்லாம் நேசிக்க வேண்டும் என்பதற்கு பிரேமலதா எடுத்துக்காட்டாக விளங்குகிறார். கணவன் இருக்கும் பொழுதும் இல்லாத போதும் அவர் நினைவுகளால் நிறைந்த அவருடைய நெஞ்சம் மிக உயர்ந்தது என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்பதில் அக்கட்சி நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன .அதிமுக ,பாமக ஆகியோர் தனி அணி அமைத்து போட்டியிட இருக்கின்றனர் .இந்த நிலையில் மூன்றாவது அணியாக

பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. தற்போது பாஜக கூட்டணியில் ஓ பி எஸ் அணியினர் உள்ள நிலையில் அவர்களுடன் தேமுதிக கை கோர்த்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

விஜயகாந்த் இல்லாத நிலையில் தற்போது தேர்தலை சந்திக்க போகும் பிரேமலதா தன் கணவன் மீதான அன்பை காட்டி அதனை வாக்காக மாற்ற முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

Most Popular