Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாராதிகாவின் முன்னாள் கணவர்கள் யாருனு தெரியுமா? சரிந்த தனிப்பட்ட வாழ்க்கையின் கதை

ராதிகாவின் முன்னாள் கணவர்கள் யாருனு தெரியுமா? சரிந்த தனிப்பட்ட வாழ்க்கையின் கதை

தமிழ் சினிமாவில் கொடி கட்டு பறக்கும் நடிகை என்றால் அது ராதிகா தான். நடிகை குணச்சித்திர நடிகை சீரியல் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல பரிணாமங்களை ராதிகா தன்னுடைய திரைப்பட வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

எதை செய்தாலும் அதை சிறப்பாக தனித்துவமாக செய்து ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். ராதிகாவுக்கு தற்போது 61 வயது ஆகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அவர் 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.

தன்னுடைய 16 வது வயதில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகை ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பது குறித்து தான் தற்போது பார்க்கிறோம்.

- Advertisement -

நடிகர் ராதிகாவின் தந்தை திரு எம் ஆர் ராதா அவர் சிறுவயதிலிருந்து நடிப்பு என்பது அவருடைய ரத்தத்திலே ஊறி இருந்தது. ராதிகா அமெரிக்காவில் சென்று படித்து வந்ததால் அவருக்கு இந்தியாவில் என்ன கலாச்சாரம் என்பதெல்லாம் தெரியாது.

- Advertisement -

அமெரிக்கா கலாச்சாரத்தில் சில காலம் அவர் வாழ்ந்து வந்தார். தமிழ் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு சில காலமானது. நடிகர் கமல்ஹாசனை முதலில் பார்த்தபோது கூட யார் இந்த அழகான பையன் என்று தான் நான் கேட்டேன் என்று ராதிகாவை கூறியிருக்கிறார்.

பெரியவர்களுடன் எப்படி நடந்து கொள்வது சீனியர்களிடம் எப்படி பேசுவது என்பது குறித்து எல்லாம் தெரியாத இந்த நிலையில் தான் ராதிகா நடிகரும் இயக்குனருமான பிரதாப் போதனை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

பிரதாப் போட்டனுடன் ராதிகா வெறும் ஒரு வருடம் தான் வாழ்ந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராதிகா விவகாரத்து கேட்டிருக்கிறார்.அதன் பிறகு அமெரிக்காவில் ரிச்சர்டு ஹார்டி என்ற நபரை ராதிகா திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

அதன் பிறகு ராதிகா விவகாரத்து பெற்றுக் கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருந்தது. அதன்பிறகு ராதிகா திரைப்பட வாழ்க்கையிலும் நடிகையாக  வாய்ப்பு குறைய தொடங்கியது. இதன் பிறகு குணச்சித்திர நடிகை ஆக மாறிய ராதிகா சீரியலிலும் கவனம் செலுத்தி அங்கே கொடி கட்டி பறந்தார்.

அவர் நடித்த சித்தி அண்ணாமலை போன்ற நாடகங்கள் தமிழக மக்களை கட்டி போட்டது. அந்த காலகட்டத்தில் ராதிகா யாருடன் துணையும் இல்லாமல் தனியாக தான் வாழ்ந்து வந்தார். அதன் பின் சூரியவம்சம் போன்ற படத்தில் நடித்த போது சரத்குமார் உடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காதலாக மாற 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை மூன்றாவது முறையாக ராதிகா திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருடன் தான் அதிக காலம் ராதிகா வாழ்ந்து வருகிறார்.

Most Popular