Monday, May 6, 2024
- Advertisement -
HomeUncategorizedஇவ்வளவு நாளா ஏன் திருமணம் செய்யவில்லை தெரியுமா? எஸ் ஜே சூர்யா ஓபன் டாக்

இவ்வளவு நாளா ஏன் திருமணம் செய்யவில்லை தெரியுமா? எஸ் ஜே சூர்யா ஓபன் டாக்

சினிமா வாழ்வில் ஒரு சிறந்த நடிகராக மக்கள் மனதை வென்றவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் இவர் இயக்குனராக இருந்தபோது இவருடைய திரைப்படங்களில் நிறைய காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

- Advertisement -

அதுபோன்ற காட்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதேபோல் அவர் நடித்த திரைப்படங்களிலும் அவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் இது போன்ற காதல் வயப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா தற்பொழுது எல்லாம் சிறந்த கதைகளை தேர்வு செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

தான் இப்பொழுதெல்லாம் திரைப்படம் இயக்காமல் இருப்பதற்கும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்கும் அவர் ஒரு பேட்டியில் காரணம் கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி திரைப்படத்திற்கு பிறகு அவர் வாழ்வில் பெரும் மாற்றத்தை உணர்ந்ததாகவும் அதுதான் என்னுடைய இந்த நடிப்பில் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருந்தார் .

- Advertisement -

தற்பொழுது ஒரு பேட்டியில் எஸ் ஜே சூர்யாவிடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேட்கப்பட்டது

எஸ் ஜே சூர்யா நான் இயக்கிய அன்பே ஆருயிரே என்ற திரைப்படம் தான் அதற்கு பதில். நான் ஒரு காதல் தோல்வி அடைந்தவன். நான் என் காதலியுடன் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் இருப்பது போல் தான் இருந்தேன். ஒருநாள் என்னுடைய காதலி இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய தயாரிப்பாளர் என்னை வரச் சொல்லி அழைத்திருந்தார். அதனால் சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி அவரிடம் சென்றேன். இரவு 12 மணி ஆகிவிட்டது அதனால் அவள் மிகவும் கோபம் கொண்டாள் .அவள் வீட்டுக்கு சென்று கதவையும் தட்டினேன்.

அவள் நினைத்த நேரத்தில் வந்து தங்குவதற்கு இது ஒன்றும் சத்திரம் அல்ல என்று கூறி கதவை சாத்தி விட்டாள் அன்று மூடப்பட்டது என்னுடைய காதல் வாழ்க்கை என்று தன்னுடைய காதல் கதையை கூறினார் எஸ் ஜே சூர்யா.

மேலும் இதன் காரணத்தினால் தான் நான் அன்பே ஆருயிரே திரைப்படத்தை இயக்கினேன் .என்னுடைய கதையை மையமாக வைத்து தான் அந்த திரைப்படத்தை இயக்கினேன் என்று கூறியிருந்தார் நடிகர் எஸ் ஜே சூர்யா.

காதல் வாழ்க்கை அவர் தோல்வி அடைந்தாலும் சினிமா வாழ்வில் அவர் வெற்றியடைந்தார் என்று தான் கூற வேண்டும், ஏனென்றால் அவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

Most Popular