Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் மகனுக்கு உதவும் சச்சின் பட இயக்குநர்.. தேர்தலுக்கு பின் தொடங்கும் படப்பிடிப்பு!

விஜய் மகனுக்கு உதவும் சச்சின் பட இயக்குநர்.. தேர்தலுக்கு பின் தொடங்கும் படப்பிடிப்பு!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜய். தந்தை இயக்கத்தில் தொடர்ச்சியாக 6 படங்களில் நடித்த பின், பூவே உனக்காக படத்தின் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். இன்று வரையிலும் நடிகர் விஜய்-க்கு தந்தையின் உதவியால் அறிமுகம் செய்யப்பட்டவர் என்ற அடையாளம் உள்ளது.

- Advertisement -

தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் பேரன் சஞ்சய் சினிமாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளார். ஆனால் தந்தை விஜய்-ன் பாணியில் நடிகராக அல்லாமல் தாத்தாவின் பாணியில் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் உதவியை நாடாமல் லைகா நிறுவனத்திடம் கதை கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். கடந்த ஆண்டே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

விஜயின் மனைவி சங்கீதா இலங்கை தமிழர் என்பதோடு, லைகா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரனும் இலங்கையை சேர்ந்தவர் தான். இந்த நிலையில் இயக்குநர் சஞ்சய் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அலுவலகத்தில் தான் சஞ்சய் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இவருக்கு உறுதுணையாக இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயை வைத்து சச்சின் படத்தை இயக்கியவர். அதன்பின் எந்த படத்தையும் மகேந்திரன் இயக்கவில்லை. இருந்தாலும் நடிகர் விஜய்-க்கு நெருக்கமானவர் மகேந்திரன். இவர் இயக்கிய சச்சின் திரைப்படம் சஞ்சய்-க்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்பதால், இவரின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

திரைக்கதை அமைக்கும் பணிகளுடன் தொழிற்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தமும் அடுத்தடுத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர்களின் தேர்வு முடிவடையும் தருவாயில் இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் சஞ்சய் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular