Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅச்ச்சோ!!!வட போச்சே!!? என்னது அந்தப் படத்தை தவற விட்டுட்டாங்களா ரவுடி பேபி ?!

அச்ச்சோ!!!வட போச்சே!!? என்னது அந்தப் படத்தை தவற விட்டுட்டாங்களா ரவுடி பேபி ?!

தனது வசீகர  நடனத்தாலும், நடிப்பாலும் இளம் ரசிகர்களின் மனதை சூறையாடியவர் நடிகை சாய் பல்லவி !! மருத்துவரான சாய் பல்லவி முதலில் தொலைக்காட்சி ஒன்றின் நடனப் போட்டியின் மூலம்  திரை உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

பின்பு தமிழ்திரை உலகில் வாய்ப்புகள் மறுக்கப்படவே,! மலையாளத்தில் பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரம் மூலம் அனைவரது மனதையும் கொள்ளை அடித்தார்..அதன் பின்பு அதிகம் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கோலிவுட் டோலிவுட் என்று கலக்கி வருகிறார் சாய் பல்லவி..
ஓடிடியில் வெளியான “பாவக்கதைகளில் ” கர்ப்பிணியாக நடித்து முத்திரை பதித்ததார்..
சமீபத்தில் வெளியான கார்க்கி திரைப்படமும் அவருக்கு நற்பெயரை வாங்கி கொடுத்தது..

- Advertisement -

தனுஷின் மாரி 2 வில் நடித்து ரவுடி பேபி பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் சாய் பல்லவி!!!
தற்பொழுது சிவகார்த்திகேயனின் எஸ் கே 28 இல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்துள்ளது.

- Advertisement -

அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க, தற்பொழுது வெளியாகி உள்ளன தகவல்களால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்!!?அது என்னவென்றால் சூப்பர் ஸ்டாரின் படங்களில் சக்கை போடு போட்ட படங்களில் ஒன்று சந்திரமுகி.
அதன் இரண்டாவது பாகமான சந்திரமுகி 2வில் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் சாய் பல்லவியை தான் அணுகினார்களாம் !

முதலில் ஒப்பு கொண்ட சாய்பல்லவி ,பின்பு இறுதி காட்சிகளில் சில மாறுதல்களை செய்தால்தான் தன்னால் நடிக்க முடியும்! என்று இயக்குனரான பி வாசு விடம் நிபந்தனை வைத்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத பி வாசு ,சாய் பல்லவியை சந்திரமுகி 2 வில் இருந்து விடுவித்துள்ளார்.

பின்பு காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்று அதுவும் கைநழுவி போய் உள்ளது.
அதன் பின்பு தான் பாலிவுட் கதாநாயகியான  கங்கணா ரெணாவத்திற்கு அந்த ஜாக்பாட் அடித்துள்ளது..
சும்மாவே கங்கணா ஆடுவார்! இதில் சலங்கை வேறு கட்டி ஆகிவிட்டது! படத்தில் என்னென்ன திகில் காட்சிகள் இருக்குமோ என்று ரசிகர்கள் கிலி பிடித்து போய் உள்ளனர்.

சாய்பல்லவிக்கு முதலில் வாய்ப்பு வந்ததை இப்படி தவற விட்டு விட்டாரே !?என்று ரசிகர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.
சாய் பல்லவி நடனத்தில் கைதேர்ந்தவர் அவர் மட்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அவருடைய நடிப்பும் நடனமும் மித மிஞ்சியதாய் இருந்திருக்குமே என்று இயக்க பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள்.

Most Popular