Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாசினிமாவில் இருந்த ஓய்வு பெரும் சமந்தா.. ! வாங்கிய பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பி அளிப்பு.. !

சினிமாவில் இருந்த ஓய்வு பெரும் சமந்தா.. ! வாங்கிய பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பி அளிப்பு.. !

தென்னிந்திய அழகிகளில் ஓர் தேவதை சமந்தா. தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டு வந்த சமந்தா மெல்ல மெல்ல படங்களை குறைத்துக் கொண்டே வந்து தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக ஓர் அதிர்ச்சித் தகவலை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது அடுத்து குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சினிமாவில் நடிக்க மாட்டார் எனத் தகவல் வந்துள்ளது. மியோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா தன் உடல் நிலையை மேம்படுத்துவதற்காக மேல் சிகிச்சைககாக செல்லவே இந்த முடிவை எடுத்துள்ளார்.

சமந்தாவின் நோய் மற்றும் துன்பம்

புஷ்பா பாடல் மற்றும் அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் சமந்தா 2.0 என ட்ரெண்டாக இருந்தார். திடீரென ஒரு நாள் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் சிகிச்சை பதிவையிட்டார் சமந்தா. மியோசிடிஸ் எனும் தன்னுடல் தாக்குநோயால் பாதிக்கபடிருப்பதாக தெரிவித்தார்.

- Advertisement -

சிறப்பாக சென்று கொண்டிருந்த அவரது கேரியர் சட்டென்று நின்றது. அதன் பின்னர் சமந்தா மனதளவிலும் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். செல்லும் நிகழ்ச்சிகளில் நோயைப் பற்றி மற்றவர்கள் கேட்க அவரும் கண்ணீர் விட பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர்களிடம் பணத்தை திருப்பி தந்த சமந்தா

தற்போது விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக குஷி எனும் தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சமந்தா. இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறவிருக்கிறது. அதோடு இறுதிக் கட்டத்தில் இருக்கும் சிட்டாடெல் எனும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துக் கொண்டுள்ளார்.

இந்த இரண்டு பிராஜெக்ட்டுக்குப் பின் சினிமாவில் இருந்த தற்காலிகமாக ஓய்வு பெற்று உடல் நிலையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். அதனால் அடுத்து தான் நடிப்பதாக ஒப்பந்தமாகிய தயாரிப்பாளர்களிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்த நோய் தாக்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்பதையும் சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார். அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு செல்லும் சமந்தா சீக்கிரம் புத்துணர்ச்சியுடன் திரும்புவார்.

Most Popular