Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாபேய்க்கும் vs பேய்க்கும் போட்டி! களத்தில் குதித்த  சந்தானம்.. போதும் சாமி

பேய்க்கும் vs பேய்க்கும் போட்டி! களத்தில் குதித்த  சந்தானம்.. போதும் சாமி

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொரோனாவுக்கு முன்பு வரை பேய் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு வாரத்துக்கு ஒவ்வொரு பேய் படம் வந்து ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது. இதில் அரண்மனை மற்றும் காஞ்சனா பேய் படங்கள் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும் அந்த படம் வெற்றி அடைந்து விட்டது என்பதற்காக அரண்மனை இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து அடுத்தடுத்து பாகங்களை எடுத்து ரசிகர்களை அயற்சி அடைய வைக்கிறார். இதை போன்று நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் மீண்டும் காஞ்சனா என தொடர்ந்து மூன்று படங்களை எடுத்து உள்ளார்.

- Advertisement -

இந்த வரிசையில் தற்போது நடிகர் சந்தானமும் இணைந்துள்ளார். நடிகர் சந்தானம் ஏற்கனவே தில்லுக்கு துட்டு என ஒரு பேய் படத்தில் நடித்தார். இதில் இரண்டு பாகம் ஏற்கனவே வெளியே வந்து இருக்கிறது. இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் சுமார் ரகம் என்ற அந்தஸ்தை தான் பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தில் மூன்றாவது பாகத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க உள்ளார். இவர் லொள்ளுசபா இயக்குனர் ராம் பாலாவின் துணை இயக்குனர் ஆவார். இந்தப் படத்திற்கான சூட்டிங் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சந்தானம் shameless சதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வழக்கமான பேய் பட போல் இல்லாமல் இதில் பேயை வைத்து நடிகர் சந்தானம் கேம் ஆடுவது போல் கதைக் களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சுரபி, ரெடிங் கிங்சிலி, மொட்ட ராஜேந்திரன் போன்றோர் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது தான் பேய் படத்துல இருந்து மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது அரண்மனை 4 ,காஞ்சனா 4 ,தில்லுக்குதுட்டு 3 என்று தமிழ் சினிமா மீண்டும் பழைய ட்ரெண்டுக்கு செல்கிறது.

Most Popular