Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகை நயன்தாராவுக்கு வலை விரித்த தி லெஜெண்ட் சரவணா அருள்.. நயன்தாரா ...

நடிகை நயன்தாராவுக்கு வலை விரித்த தி லெஜெண்ட் சரவணா அருள்.. நயன்தாரா சிக்கினாரா ..?இல்லையா..?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா .இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு  தாயாக வாழ்ந்து வருகிறார் .

- Advertisement -

இருந்த போதிலும் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை விடவில்லை. திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமிடப்பட்ட ஜவான், இறைவன் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் திரைப்படங்கள் தந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இவர் சில வணிகத் தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே நடிகை நயன்தாரா அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளின் முதலிடத்தில் இருப்பவர் ஆவார். இவரிடம் காசு பணத்திற்கு எந்த குறையும் இல்லை என்பது சாமானியனுக்கு  கூட தெரியும் அப்படிப்பட்ட நயன்தாராவை தன் நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி ஆக்க நினைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் தற்பொழுது  நடிகருமான சரவணன் அருள் .த லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் இன் உரிமையாளரான சரவணா அருள் தன்னுடைய சொந்த தயாரிப்பில் 2022 இல் த லெஜன்ட் என்ற திரைப்படத்தை நடித்து வெளியிட்டார். அந்தத் திரைப்படத்தில் அவரை பலரும் பல கோணத்தில் விமர்சித்தனர் உருவக்கேளியும் செய்தனர். அந்த திரைப்படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று படுதோல்வி அடைந்தது .

- Advertisement -

தன்னுடைய லெஜன்ட் என்ற மாபெரும் ஜவுளி கடையில் விளம்பரத்தில் அவரே மாடலாக வந்தபோது அவரை பலரும் உருவ கேலி செய்ததால் திரைப்படத்தை தானே தயாரிக்கும் சொத்திற்கு சொந்தக்காரர் அதனால் உருவ கேலி செய்தவர்கள் முன் உயர்ந்தாக வேண்டும் என்று இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்து கதாநாயகனாக களத்தில் குதித்தார் சரவண அருள். அதிலும் நயன்தாராவை கதாநாயகி ஆக்குவேன் என்று சவாலும் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பலவிதத்தில் முயற்சி செய்திருக்கிறார் சரவண அருள்.
இது பற்றி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

தனியார் ஊடகம் ஒன்றில் திரைப்பட பத்திரிகையாளரான செய்யாறு பாலு என்பவர் இது பற்றி ஒரு தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார் .லெஜன்ட் திரைப்படம் இயக்குவதற்கு முன்பு சரவண அருளின் உடைய கார் எப்பொழுதும் நயன்தாரா வசிக்கும் விவிஐபிகள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் பார்த்ததாகவும் அது அந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் என்று கூறினார்.

மேலும் சாதாரணமாகவே நயன்தாரா அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை. அவருக்கு இரண்டு மடங்கு அதிக தருகிறேன் என்றும் சரவணன் அருள் கூறியதாகவும் கூறினார் .ஆனால் நடிகை நயன்தாரா நீங்கள் 100 கோடி கொடுத்தாலும் இந்த திரைப்படத்தின் நடிக்க மாட்டேன் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாராவைப் போன்ற ஒரு நடிகையை தான் அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பல முயற்சி எடுத்து இருக்கிறார் சரவணன் அருள். கடைசியில் பாலிவுட்டில் கம்மியான சம்பளம் வாங்கி வந்த ஊர்வசி ரவுலாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் சரவண அருள்.

மேலும் சரவண அருள் நடிகை நயன்தாராவை திரைப்படத்தில் நான் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதற்காகவே அவரும் ஒரு வீடு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அத்தனை முயற்சிகளும் பலனில்லாமல் போகிவிட்டது.

Most Popular