Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமா“ எனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை காரணம்.. அவர் நடித்த இந்தப் படம் எனக்கு ரொம்ப...

“ எனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை காரணம்.. அவர் நடித்த இந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ” ஜெயிலர் பட சிவராஜ் குமார் பேச்சு.. !

ஜெயிலர் க்ளைமாக்சில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால் என மூன்று சூப்பர்ஸ்டார்கள் அதிரடியாக என்ட்ரி கொடுக்க திரையரங்கே அதிறியது, குறிப்பாக சிவராஜ் குமாருக்கு. இரண்டே காட்சிகளில் வந்து ஒட்டுமொத்த பார்வையாளர்களின் விசில்களையும் சம்பாதித்துவிட்டார்.

- Advertisement -

சிவராஜ் குமாரின் மாஸ் குறித்து இயக்குனர் நெல்சன் இசை வெளியீட்டு விழாவிலேயே, “ அவர் நடந்து வருவதே உண்மையான கேங்ஸ்டர் போல இருக்கும் ” என்று குறிப்பிட்டார். கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாரன இவர் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டிலும் ரசிகர்களை கைபற்றி வருகிறார். அவரின் அடுத்தத் தமிழ் படமான கேப்டன் மில்லருக்கு எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது.

இவர் ட்ரெண்ட் ஆன உடனே புரொமோஷன் நோக்கில் அவரை வைத்து நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியது சன் நிறுவனம். அதில் சிவராஜ் குமாரிடம், “ தமிழ் சினிமாவில் அடுத்து இந்த ஹீரோவுடன் எனக்கு பணிபுரிய ஆசையுள்ளது என ஏதாவது இருக்கிறதா ? ” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

உடனே அவர் சற்றும் தயங்காமல், “ எனக்கு அஜித்குமாருடன் படம் செய்ய மிகவும் ஆசை. ” என்றார். அதற்கான காரணத்தையும் சிவராஜ் குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “ அஜித் மிகவும் நல்ல மனிதர். அவரின் பைக் வீடியோக்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர் சாதாரணமாக மற்ற மனிதர்களுடன் கொண்டுள்ள இணைப்பு என் மனதைத் தொட்டுள்ளது. ” என்றார்.

- Advertisement -

அடுத்ததாக தொகுப்பாளர், “ உங்களுக்கு எந்த விதமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென விருப்பம். அதாவது உங்களின் குணத்தைக் காட்டக்கூடிய கதாபாத்திரம். ” எனக் கேட்டார். இதற்கும் அவர் அஜித் படத்தையே குறிப்பிட்டார். “ எனக்கு அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ” என்றார்.

ஏதேனும் ஒரு இயக்குனர் அஜித் மற்றும் சிவராஜ் குமாரை வைத்து இயக்கினால் மிகவும் மாஸாக இருக்கும். சிவராஜ் குமார் அவர்களின் ஆசையும் நிறைவேறும்.

Most Popular