Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஇது வெறும் ஆரம்பம் தான்.. மாவீரன் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் மாஸ் பேச்சு!

இது வெறும் ஆரம்பம் தான்.. மாவீரன் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் மாஸ் பேச்சு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் திரைப்படம் வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையை மாவீரன் படைத்து இருக்கிறது.இதற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்று ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் விரும்பினால் அவருடன் மேலும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் போட்டி இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அப்படி எங்களுக்குள் எதுவும் இல்லை. காலம் கை கூடினால் நான் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும் என நான் நம்புகிறேன்.

- Advertisement -

அதற்கான தொடக்கமாகவே மாவீரன் திரைப்படத்தை நான் நினைக்கிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் எப்போதுமே மாறி மாறி தான் வரும். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தோல்விக்கு பிறகு எனக்கு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெற்றியாக அமைந்தது.

- Advertisement -

இதேபோன்று ஹீரோ திரைப்படத்திற்குப் பிறகு டாக்டர் வந்தது.அது எனக்கு ஹிட் ஆக அமைந்தது. தற்போது மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு வந்தது. தற்போது மாவீரன் ஹிட் ஆக இருக்கிறது.

இதனால் நான் சொல்ல வருவது வெற்றி என்பது ஒரு பயணம் தான். தவிர அது நமக்கான முடிவு கிடையாது. மாவீரன் எனக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக தான் இருக்கும்.

ஏனென்றால் எப்போதுமே என்னுடைய படத்தை தான் அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். தற்போது முதல் முறையாக என்னுடைய நடிப்பு மாவீரன் படத்தில் நன்றாக இருந்தது என்று பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

நான் நல்ல நடிகன் என்பதை விட ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு கொடுக்கும் என்டர் ட்ரெயினராகவே இருக்க விரும்புகிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் பிரின்ஸ் படத்திலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருந்திருக்கிறார்.

அவர் பேசிய போது பிரின்ஸ் திரைப்படம் சிலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய உடன் சிவகார்த்திகேயன் அந்த நஷ்டத்தை ஈடு கட்டியதாக கூறியுள்ளார்.

Most Popular