Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainmentகுஷி இடுப்பை பார்த்து, விஜய் மட்டும் அல்ல, நானும் கஷ்டப்பட்டேன்.. எஸ்.ஜே.சூர்யா பேட்டி

குஷி இடுப்பை பார்த்து, விஜய் மட்டும் அல்ல, நானும் கஷ்டப்பட்டேன்.. எஸ்.ஜே.சூர்யா பேட்டி

தற்பொழுது தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர். பின்பு தல அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

எஸ் ஜே சூர்யா இவரை நடிகர் என்பதா இயக்குனர் என்பதா இசையமைப்பாளர் என்பதா என்று தெரியாத அளவிற்கு எல்லா துறையிலும் கலக்கக்கூடிய ஒரு ஆள் என்றால் அது எஸ் ஜே சூர்யா தான் எஸ் ஜே சூர்யா சினிமாவிற்கு ஒரு புல் பேக்கேஜ் ஆவார்.

வாலி திரைப்படத்தை தொடர்ந்து அவர் குஷி நியூ அன்பே ஆருயிரே இசை போன்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இயக்கிய எல்லா திரைப்படங்களுமே வித்தியாசமான கதைக்கலங்களைக் கொண்டு வெற்றி அடைந்த திரைப்படங்கள் ஆகும். அன்பே ஆருயிரே, நியூ போன்ற திரைப்படங்கள் எல்லாம் யாருமே கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிக வித்தியாசமாக இயக்கப்பட்ட திரைப்படங்களாக அமைந்திருந்தது.

- Advertisement -

இயக்கம் திறனின் வல்லவராக இருந்தும் தற்பொழுது அவர் வெறும் நடிகராக இருப்பதற்கு காரணம். அதை விட சிறந்ததாக இருக்கும் அவருடைய நடிப்புதான். ஆனால் அதற்காக அவரின் இயக்கத்தை குறைத்து எடை போட்டு விட முடியாது.

- Advertisement -

அவரை ஒரு சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கு அவர் ஒரு நேர்காணலில் அவர் இயக்கிய குஷி திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்கியதைப் பற்றி கூறியதை மிகப்பெரிய சாட்சியாகும்.

குஷி என்றாலே அனைவரின் மனதிலும் தோன்றுவது என்னவென்றால் மொட்டை மாடியில் ஜோதிகா மற்றும் விஜய் இருவரும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஜோதிகாவின் இடுப்பை விஜய் பார்க்கும் அந்த காட்சி தான் பலரின் மனதிலும் முதலில் தோன்றும் .

அந்த காட்சியை எடுப்பதற்கு எஸ் ஜே சூர்யா மூன்று நாட்கள் காத்திருந்தாராம்.அதன் காரணம் என்னவென்றால் அந்த காட்சியின் போது மேலே விமானம் பறப்பது போன்ற சத்தம் ஏற்படும். அந்த சமயம் விஜய் தன்னுடைய வசனத்தை விமான சத்தத்தின் காரணமாக நிறுத்தி,விமானம் சென்ற பிறகு பேசுவது போன்ற ஒரு காட்சி இருக்கும்.

அதற்கு வானில் ஒரு விமானம் செல்ல வேண்டும் அந்த சமயத்தில் தான் அந்த காட்சி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எஸ்ஜே சூர்யா அந்த காட்சியை எடுக்க மூன்று நாட்கள் காத்திருந்திருக்கிறார்.

இதை அவரை தன் வாயால் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். எஸ்ஜே சூர்யா இயக்குனராக ஒரு திரைப்படத்தில் நுணுக்கமாக ஒவ்வொரு விஷயத்தையும் இயக்குவதற்கு எவ்வளவு பொறுமையுடன் முயற்சி செய்திருக்கிறார் என்பதை இந்த நிகழ்வில் குறிப்பிடுகிறது.

சில திரைப்படங்கள் இயக்கினாலும் ஒரு சிறந்த இயக்குனரின் பட்டியலில் எஸ் ஜே சூர்யாவின் பேரிடம் பெற்றிருப்பதற்கு இந்த பொறுமையை காரணமாக அமைந்திருக்கும்.தற்பொழுது இவர் நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறார். கலைஞர் எந்த துறையில் இருந்தாலும் அவன் கலைஞன் தான் அதை எஸ் ஜே சூர்யா நிருபித்து வருகிறார்.

Most Popular