Friday, May 3, 2024
- Advertisement -
HomeசினிமாSTR 48- தீபிகா படுகோண்லாம் பொய்ங்க! சிம்பு எடுத்த அதிரடி முடிவு

STR 48- தீபிகா படுகோண்லாம் பொய்ங்க! சிம்பு எடுத்த அதிரடி முடிவு

நடிகர் சிம்பு தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்காக பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மாநாடு திரைப்படம் மூலம் கம்பாக் கொடுத்துள்ள நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதனால் சிம்புவின் மார்க்கெட் இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு தன்னுடைய 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி எடுக்க உள்ளார்.

- Advertisement -

தேசிங்கு பெரியசாமியின் முதல் படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அவரிடம் கதை கேட்டு இருக்கிறார். இதுவே அவருடைய திறமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பட குழு அது பொய்யான தகவல் என்றும் தமிழ் நடிகையே நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய சிம்பு தான் காட்டு பசியில் இருப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல் இந்த படம் அமைந்திருப்பதாகவும் சிம்பு கூறி இருந்தார்.

இந்த படத்திற்கு தயாராகும் வகையில் ஏற்கனவே பேங்காக் சென்று ஒன்றை மாதம் பயிற்சியில் நடிகர் சிம்பு ஈடுபட்டார். இந்த நிலையில் மேலும் இந்த படத்திற்கு தயாராகும் வகையில் தற்போது லண்டனுக்கு நடிகர் சிம்பு சென்று உள்ளார். அங்கு வால் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கலைகளை நடிகர் சிம்பு தன்னுடைய புதிய படத்திற்காக கற்று வருகிறார்.

சிம்புவின் இந்த உழைப்புக்கு நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிக்கு கூறிய அதே கதையை தான் நடிகர் சிம்புவுக்கு தற்போது தேசிங் பெரியசாமி கூறியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. தமக்கு வயதாகிவிட்டதால் இந்த கதாபாத்திரம் செட் ஆகாது என ரஜினி மறுத்துவிட்டதால் தான் அந்த படம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular