Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஅரண்மனை ஆசையை கைவிடாத சுந்தர் சி… பொங்கலுக்கு நான்காம் பாகத்தை கூட்டி வரும் இயக்குனர்… இதுக்கு...

அரண்மனை ஆசையை கைவிடாத சுந்தர் சி… பொங்கலுக்கு நான்காம் பாகத்தை கூட்டி வரும் இயக்குனர்… இதுக்கு மேல முடியாது குருநாதா என கதறும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்தமாக பேய் படங்களை வாடகைக்கு வாங்கி விட்டவர்கள் முதல் இடத்தில் இருப்பவர்கள் ராகவா லாரன்ஸும், சுந்தர் சி-யும் தான். ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணிடம் உதவியாளராக இருந்த அவர், முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

- Advertisement -

ஒரு திரைப்படத்தை நகைச்சுவையுடன் கூடிய கமர்சியலாக கொடுத்து அதில் வெற்றி கொடி நாட்டிய இயக்குனர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் தொடாத கமர்சியல் எலமெண்டை கச்சிதமாக கையில் எடுத்த அவர், உள்ளத்தை அள்ளித்தா என்னும் திரைப்படத்தை கொடுத்து அசர வைத்தார். அன்று சூழலில் அது தமிழ் சினிமாவுக்கு முழுக்க முழுக்க மிகப் புதிதாக அமைந்த திரைப்படம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து மேட்டுக்குடி எடுத்து மீண்டும் ஒருமுறை சிக்சர் அடித்த சுந்தர் சி, அடுத்ததாக ரஜினியுடன் இந்த அருணாச்சலம் திரைப்படத்தை இயக்கினார். கடவுள் எல்லாம் தாண்டி அன்பு தான் இந்த உலகத்தில் எல்லோருக்கும் சொந்தமானது என்பதை கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் என்னும் படத்தின் மூலம் உரக்கக் கூறியிருந்தார் சுந்தர் சி.

- Advertisement -

தொடர்ந்து உள்ளம் கொள்ளை போகுதே, வின்னர், கிரி, லண்டன், கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களை எடுத்த சுந்தர் சி-க்கு திடீரென ஹாரர் திரைப்படத்தின் மேல் கண் போனது. அதன் விளைவாகத்தான் அரண்மனை எனும் திரைப்படத்தை அவர் எடுத்தார். ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடித்த அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது.

- Advertisement -

வழக்கமாக கிராமத்தின் ஓரத்தில் இருக்கும் அரண்மனை, அதில் பதுங்கி இருக்கும் பேய், அந்த பேயை விரட்டும் நாயகன் என ஒரே ஜானரில் கதை இருந்தாலும் அதில் நகைச்சுவையை தூவி திரைக்கதையை பலமாக அமைத்து வெற்றி கண்டார் சுந்தர்சி. திரிஷாவை வைத்து அவர் எடுத்த அரண்மனை படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஆர்யாவை வைத்து அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்தார் சுந்தர் சி. இதில் கேமியோ ரோலிலேயே ஆர்யா நடித்திருந்தாலும், திரைக்கதை அந்த அளவு எடுபடாமல் போனதாலும் படம் தோல்வி அடைந்தது. இருப்பினும் அரண்மனை ஆசையை விடாத சுந்தர் சி, அதன் நான்காம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதில் விஜய் சேதுபதி, சந்தானம் ஆகிய நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான பட பூஜையிலும் அவர்கள் கடந்து கொண்ட நிலையில், நிலைமையை சுதாரித்த நடிகர்கள் இருவரும் சுந்தர் சி இடமிருந்து எஸ்கேப் ஆயினர்.

இதனால் தனது ஆஸ்தான ஹீரோயின்களை நம்பியே சோலோவாக கிளம்பி இறங்கி இருக்கிறார் சுந்தர் சி. இதிலும் தம்மன்னா, ராசி கண்ணா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். காமெடிக்கு யோகி பாபு இருக்கிறார். பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகை என்று வெளியாகும் நிலையில், தற்போது இந்த ரேசில் அரண்மனை படத்தின் நான்காம் பாகமும் இணைந்துள்ளது.

Most Popular