Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியிடம் புகார் அளித்த படக்குழுவினர்.. நெல்சனுக்கு எச்சரிக்கை கொடுத்த சூப்பர் ஸ்டார்.. ஜெய்லரில் நடந்தது என்ன?

ரஜினியிடம் புகார் அளித்த படக்குழுவினர்.. நெல்சனுக்கு எச்சரிக்கை கொடுத்த சூப்பர் ஸ்டார்.. ஜெய்லரில் நடந்தது என்ன?

- Advertisement -

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெய்லர் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னும் படத்தின் பின்னணி இசை ரசிகர்கள் இடையே அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் ஷூட்டிங் போது நடைபெற்ற சம்பவம் தற்போது ஒன்று வெளியே வந்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இதனால் பலரும் நெல்சனை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நெல்சன் ஜெய்லர் படத்திற்காக கிட்டத்தட்ட 20 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை உழைத்திருக்கிறார்.ஜெயிலர் ஷூட்டிங்கில் அவர் தூங்கவே இல்லையாம், மற்றவர்களையும் வேலை வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் கடுப்பான பட குழுவினர் ரஜினியிடம் நெல்சன் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். எங்களுக்கும் ஓய்வு கொடுப்பதில்லை என்று புகார் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் ரஜினி, நெல்சனை அழைத்து முந்தைய படம் எப்படி இருந்தாலும் சரி உன் கதை மீதும் உன் மீதும் உனக்கு நம்பிக்கை இருந்தால் ரிலாக்ஸ் ஆக இந்த படத்தை வேலை பார்.

வெற்றி எங்கேயும் போய்விடாது. நிச்சயம் அது கிடைக்கும். முதலில் உடல் நலம் தான் மிகவும் முக்கியம். உடல் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். அப்போதுதான் கலைஞர்களால் கிரியேட்டிவாக இருக்க முடியும். இதனால் நேரத்திற்கு தூங்கு என அறிவுறுத்தி இருக்கிறார்.ரஜினியின் இந்த அட்வைஸை கேட்ட நெல்சன் நெகிழ்ச்சியில் உறைந்து போனாராம்.

Most Popular