Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentபிரபாஸ் வாங்கின அடியை பார்த்தும் திருந்தாத சூர்யா.. 3 பான் இந்தியா படங்களில் நடிக்க திட்டம்.....

பிரபாஸ் வாங்கின அடியை பார்த்தும் திருந்தாத சூர்யா.. 3 பான் இந்தியா படங்களில் நடிக்க திட்டம்.. லட்டு மாதிரி நாயகி ஒப்பந்தம்!


சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் 10 மொழிகளில் 3டி ஜானரில் உருவாகி வருகிறது

- Advertisement -

இந்த படத்தை பான் இந்தியா லெவனில் ஹிட் செய்வதற்காக நாயகியான திஷா படானி, வில்லனாக பாபி டியோல் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாபி டியோலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கான ஸ்பெஷல் போஸ்டரை கங்குவா படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் உதிரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக புறநானூறு என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதிலும் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் வில்லனான விஜய் வர்மா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுதா கொங்கரா இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கை இயக்கி வருவதால், அடுத்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன்பின் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கங்குவா படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவும் இயக்குநர் ராகேஷ் ஒம்பிரகாஷ் சந்திப்பு நடைபெற்றது. இதனால் சூர்யா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் அடுத்ததாக மகாபாரத கதையை கர்ணனின் பார்வையில் எழுதியுள்ளார்.

- Advertisement -

அதில் கர்ணனின் கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் இந்த படம் பாக் மிகா பாக், ரங் தே பசந்தி போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்ணன் மற்றும் மகாபாரத கருவை வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் நாயகியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

Most Popular