Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentநான்கு வேதங்களை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறாரா சூர்யா… தெலுங்கு இயக்குனருடன் ஒரு பலே திட்டம்

நான்கு வேதங்களை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறாரா சூர்யா… தெலுங்கு இயக்குனருடன் ஒரு பலே திட்டம்

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, இந்த முறை சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, கொடைக்கானலில் நடைபெற்றது. தற்போது, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

- Advertisement -

முந்தைய ஜென்மத்திற்கும், தற்போதைய பிறவிக்குமான தொடர்பை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. போர்க்களம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதால், இதன் சூட்டிங் கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபருடன் சூர்யா, கங்குவா படத்தின் சூட்டிங் பணிகளை முடித்து இருக்கிறார். இதன்பிறகு, சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என பலராலம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவரது அடுத்த படத்தை சுதா கொங்கரா எடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதா கொங்கரா சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். மேலும், படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி இருப்பதாகவும், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -
Suriya 42 Kanguva

இந்த திரைப்படத்தின் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருப்பதால், அதன் வேலைகள் முடிந்த பிறகு இதன் பணிகள் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தில், கிளைமாக்ஸ் வந்து பலரையும் பதற வைத்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழு படத்தையும் லோகேஷ் கனகராஜ் எடுக்க இருக்கிறார். இதன்பிறகு, அவர் இயக்கத்திலேயே இரும்பு கை மாயாவி படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் சந்து மொடெட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கார்த்திகேயன் 2 திரைப்படத்தை வெற்றி பெற்ற சந்து சூர்யாவிடம் கதை கூறியிருக்கிறார். ரிக் யசூர் சாம அதர்வண என நான்கு வேதங்களை தொடர்பு படுத்தி இருக்கும் இந்த கதை சூர்யாவுக்கும் மிகவும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியாக இருந்தாலும், சந்துவை அவர் தொடர்பு கொண்டு ஸ்கிரிப்ட் முடிக்குமாறு கூறியிருக்கிறார். இதனால் விரைவில் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்த படங்களில் சூர்யா கமிட் ஆகிக்கொண்டே வருவதால், வாடிவாசல் எப்போதுதான் எடுக்கப்படும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular