Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா பர்த்டே ஸ்பெஷல்- சூர்யா,ஜோதிகா தம்பதிக்கு ரஹ்மான் தந்த பரிசு

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்- சூர்யா,ஜோதிகா தம்பதிக்கு ரஹ்மான் தந்த பரிசு

நடிகர் சூர்யா தன்னுடைய 48 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

நடிகர் சூர்யா ஒரு சாதாரண நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு நல்ல மனிதரும் கூட என்பது அனைவருக்குமே தெரியும் .சூர்யாவின் ரசிகர்களை ஒரு நடிகனின் ரசிகர்களாக பார்க்காமல் ஒரு நல்ல மனிதன் ரசிகர்களாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள்.

தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் நல்ல முறையில் செலவழிக்கும் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் நடிகர் சூர்யா. அகரம் என்ற நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வியை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா.

- Advertisement -

அதேபோல் நடிப்பிலும் அவர் மிக சிறந்த நடிகர் தான் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளும் இருக்கிறது. நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் நடிகராக அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் அவருக்கு ஹிட்டான திரைப்படங்கள் என்று பெரும்பாலும் இதுவும் அமையவில்லை.

- Advertisement -

அவர் நடித்த நந்தா காக்க காக்க போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. சிங்கம் திரைப்படத்திலிருந்து அவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்போம் அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியது.

தமிழ் சினிமாவின் கம்பீரமான நடிகர் என்று கூட நடிகர் சூர்யாவை கூறலாம். நடிகர் சூர்யா தற்பொழுது நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் சூர்யா ஒரு காலத்தில் தன் மனைவி ஜோதிகாவை காதலித்தது பற்றி சில விஷயங்களை கூறி பல விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

என்னுடைய காதல் உண்மையிலேயே மிக அழகான காதல் தான் வருடத்திற்கு ஒருவரை காதலிப்பது ஊர் சுற்றுவது பின்பு மனதிற்கு பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்வது போன்ற இந்த காலகட்டத்தில் இவர்களுடைய காதல் வெளியிலேயே தெரியாமல் உன்னதமாக வளர்ந்த காதல் ஆகும்.

இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திலிருந்து இவர்களுக்குள் காதல் மலர தொடங்கியது இதை யாரிடமும் கூறாமல் சூர்யாவும் ஜோதிக்காவும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் காக்க காக்க,பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதில் இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல் .

இந்த திரைப்படம் வெளியிடப்படக்கூடிய நாட்களில் தான் இவர்களுடைய நிஜ வாழ்விலும் திருமணம் பேச்சுகள் தொடங்கியது. இதை அறிந்த இத்திரைப்படத்தினுடைய இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இவர்கள் இருவருடைய திருமண நாள் பரிசாக அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அவளுக்கு என்ன அம்பாசமுத்திர அல்வா போன்ற என்ற பாடலை இயக்கி பரிசளித்தாராம்.

இந்தப் பாடலும் அந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருடைய திருமணத்தின் போது தான் அமைந்திருக்கும். இந்த திரைப்படம் வெளியிடப்பட்டு இரண்டு மூன்று நாட்களிலேயே இவர்களுடைய திருமணமும் நடைபெற்ற முடிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை மணமொத்த தம்பதியாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். சூர்யாவின் உடைய சினிமா வாழ்வின் மிகப்பெரிய சப்போட்டாக இருப்பது தன்னுடைய மனைவிதான் என்று அவரும் பல இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யா ஜோதிகாவின் காதலை அனைவருக்கும் வெளியிட்டது ஏ ஆர் ரகுமான் தான் என்ற தகவல் தற்பொழுது வெளியாகும் இந்த நிலையில் ரசிகர்கள் சூர்யாவின் பிறந்த நாள் உடன் அவருடைய வாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular