Uncategorized

நீங்க ஜோதினா ! நாங்க சத்யம் தியேட்டர்.. அஜித், விஜய் ரசிகர்களிடையே வந்த புதிய பிரச்சினை

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களாக  விளங்குகிறார்கள். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ,அஜித் நடிக்கும் திரைப்படம் பொங்கல் அன்று ஒரே நாளில் திரைக்கு வருகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார் .விஜய் நடிக்கும் வாரிசு படத்தை செவன் ஸ்கிரின் ஸ்டூடியோஸ் லலித் குமார் தமிழகத்தில் வெளியிடுகிறார்.இந்த நிலையில்   உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திரையரங்குகளை துணிவு படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதன் காரணமாக வாரிசு திரைப்படத்திற்கு பல இடங்களில் டாப் கிளாஸ் திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் திரையரங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு படத்திற்குமே ஒரே அளவு தான் இருக்கும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார். திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்யும் பணியில் துணிவு பட குழு தங்களது பலத்தை பயன்படுத்தி முதலில் களத்தில் குதித்தது. இதற்கு அடுத்தபடியாக பழைய டிரெண்டாக கருதப்படும் பெரிய அளவிலான பேனர்களை திரையரங்குகளுக்கு வெளியே அமைக்கும் பணியிலும் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார். குறிப்பாக அஜித்தின் பிரம்மாண்ட பேனர்களை சென்னை பரங்கிமலை ஜோதி திரையரங்குக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் உள்ள பிரபல சத்தியம் தியேட்டரில் பார்க்கிங் இடத்தில் உள்ள மிகப்பிரமாண்டமான பெரிய சைஸ் பேனரை வாரிசு பட குழு வைத்திருக்கிறது. இதேபோன்று பிரபல திரையரங்கான கமலா தியேட்டர் முன் பெரிய அளவிலான பேனரை வாரிசு படக்குழு வைத்துள்ளது.இதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் ஜோதி தியேட்டரில் வைத்திருந்த பேனரை காப்பியடித்து வாரிசு திரைப்பட குழு இதனை செய்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடி தந்துள்ள விஜய் ரசிகர்கள் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகும் என ஓர் ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதை அடுத்து வேண்டுமென்றே போட்டிக்காக துணிவு திரைப்படம் அதே தினத்தில் வெளியிடப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் தங்களுடைய அரசியல் பலத்தை வைத்து பெரிய திரையரங்குகளை தங்கள் பக்கம் இழுத்து விட்டதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாக இருந்தாலும் இருத்தரப்பு ரசிகர்களிடையே தற்போதே பிரச்சனை தொடங்கி விட்டது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top