Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்வாரிசு படத்தின் புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் முதல் காட்சி எத்தனை மணிக்கு?

வாரிசு படத்தின் புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் முதல் காட்சி எத்தனை மணிக்கு?

- Advertisement -

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் படத்தின் புக்கிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் முதல் திரையரங்காக தூத்துக்குடியில் உள்ள நியூ கிளியோபட்ரா திரையரங்கில் வாரிசு திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று தொடங்கியது.

இதில் நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்திற்கு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு மூன்றாவது காட்சி காலை எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவில் வாரிசு திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்டது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்திற்கான காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிஸ் பிளக்ஸ் திரையரங்கில் வாரிசு திரைப்படத்திற்கு 19 காட்சிகளும் துணிவு திரைப்படத்திற்கு ஆறு காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் உள்ள ஜாஸ் திரையரங்கில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. இரண்டு திரைப்படங்களுக்கும் தலா ஐந்து காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று இரவில் இருந்து இரண்டு படங்களுக்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

- Advertisement -

இதனிடையே அமெரிக்காவில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் வாரிசு இந்திய ரூபாய் மதிப்பில் 94 லட்சம் ரூபாயும் துணிவு திரைப்படம் இந்திய ரூபாய் மதிப்பில் 58 லட்சம் ரூபாயும் தற்போது வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற பிரிட்டனில் வாரிசு திரைப்படம் இதுவரை 22 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இதன் மூலம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வாரிசு திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்தில் முதல் வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை வாரிசு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Most Popular