Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதிடீரென்று குக் வித் கோமாளியை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் .. காரணம் என்ன..?

திடீரென்று குக் வித் கோமாளியை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் .. காரணம் என்ன..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி இதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது அதில் இருக்கும் நடுவர்கள் தொகுப்பாளர்கள் கண்டஸ்டன்டுகள் என்ற அனைவருமே மக்களை மகிழ்விக்க மட்டுமே அந்த சோவிற்கு வருகிறார்கள். அந்த அளவிற்கு தன்னலம் மற்ற ஒரு சிநேகம் அவர்களுக்குள் காணப்படும்.

- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்த அந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தவர்கள் அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆனால் தற்பொழுது ஒரு சோகமான செய்தி வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்த வெங்கடேஷ் பட் வரக்கூடிய சீசன் 5 இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .அதை பற்றி வெங்கடேஷ் பட்டை ஒரு பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சில நாட்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க இருக்கிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதில் நான் தொடர்ந்து தீர்ப்பு வழங்குவேன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அனைவரும் கூறுவது போல் நான் இந்த முறை இந்த சீசனில் இல்லை என்பதை கூறுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார் வெங்கடேஷ் பட். இதன் மூலம் இவர் இந்த சீசனில் கலந்து கொள்ள போவதில்லை என்பதும் தெரிய வருகிறது. மேலும் சில வார்த்தைகளையும் குறிப்பிட்டு இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

- Advertisement -

என்னோடு சேர்ந்து மில்லியன் கணக்கான மக்களை மகிழ்வித்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் விடைபெறுகிறேன். குக் வித் கோமாளி என்னுடைய ஜாலியான உண்மை பக்கத்தை காட்டியது .நான் நானாக இருப்பதற்கு மிகவும் சௌரியமாக இருந்தது இந்த நிகழ்ச்சி தான்.

நான் விஜய் டிவியில் 24 வருடங்களாக ஒரு அங்கமாக இருந்ததற்கு நன்றி தெரிவித்து விட்டு .என்னுடைய மற்ற வாய்ப்புகளுக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறேன். பல்வேறு அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் வாழ்க்கையை சீர்படுத்துவதற்கும் மன அழுத்ததை குறைக்கும் விதமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியின் அன்புக்குரிய இயக்குனர் திரு .பிரத்யூ மணி அவர்களுக்கும் மீடியா மேன்ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

எனக்கு இது மிகவும் கடினமான முடிவு தான் விரைவில் ஒரு வித்தியாசமான கருத்தாக்கத்தில் உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் இருக்கிறேன் .அதுவரை எது போன்ற மேடை எது போன்ற நிகழ்ச்சி என்று யோகியுங்கள் நன்றி குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்பவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி நிறைவு செய்திருக்கிறார் வெங்கடேஷ் பட்.

இதன் மூலம் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளில் கலந்து கொள்ள போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது .இந்த செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதில் இருக்கும் ஒவ்வொருவரும் சேர்ந்தால்தான் அந்த நிகழ்ச்சி பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அதில் யாரையும் மிஸ் செய்ய ரசிகர்கள் விரும்பவில்லை .வெங்கடேஷ் பட் மீண்டும் அதற்கு வருகை தந்தால் நன்றாக இருக்கும் என்பதை பலரின் கருத்தாக இருக்கிறது.

Most Popular