Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாவெற்றி மாறனின் ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸிலும் பாடாய்படும் விஜய் சேதுபதி- விரைவில் விடுதலை பெறுவாரா?

வெற்றி மாறனின் ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸிலும் பாடாய்படும் விஜய் சேதுபதி- விரைவில் விடுதலை பெறுவாரா?

காமெடி நடிகரான பரோட்டா சூரி கதாநாயகனாக அறிமுகமான படம் தான் விடுதலை. இப்படத்தின் வழிநெடுக காட்டுமல்லி பாடலை ரசிக்காதவர் யாரும் இல்லை எனலாம். வெற்றிமாறனின் இயக்கத்தில் , எழுத்தாளர் ஜெயமோகனின்  துணைவன் என்ற சிறுகதையை கதையின் கருவாக வைத்து எதார்த்தமான படமாக விடுதலை வெளிவந்தது.

- Advertisement -

வெற்றிமாறன் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் விசாரணை போன்ற தரமான படங்களை இயக்கியவர். தன்னிகரில்லா தன் திரைக்கதை மற்றும் இயக்கத்தினால் ஐந்து முறை தேசிய விருதை அசால்டாக தட்டி பறித்தவர்.
இவரது சமீபத்திய திரைப்படம் தான் விடுதலை.

சிறந்த முறையில் படம் வெளி வந்தாலும் பலதரப்பட்ட விமர்சனங்களை இப்படம் கடந்து வந்தது. சூரி கதாநாயகனாக இருந்த போதும் விஜய் சேதுபதி மையமாக வைத்து தான் படம் இருந்தது. ஆனால் விஜய் சேதுபதிக்கு போதிய இடம் தரவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

- Advertisement -

முதலில் ஒரு பாகமாகவே இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்த  வெற்றி மாறன், எந்த இடத்திலும் கதையை குறைக்க முடியாது, முயற்சித்தால் சுவாரசியம் குறையும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து இரண்டு பாகமாக இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டார்.
அதன்படி விடுதலை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்தையும் ஒருசேர பதிவாக்கினர்.

- Advertisement -

முதல் பாகத்தில்  கலவையான விமர்சனங்களால் கலங்கி போன பட குழு, இரண்டாம் பாகத்தில்  அத்தகைய விமர்சனங்கள் வந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறதாம்.
இதனால் மறுபடியும் காட்சிகளை மெருகேற்றி புதிதாக மறுபடியும் படக் காட்சிகளை பதிவு செய்வதற்காக சிறுமலையில் விஜய் சேதுபதி சூரி போன்ற நட்சத்திரங்களுடன் முகாமிட்டுள்ளதாம் பட குழு!

50 நாட்களுக்கு மேல் பட காட்சிகளை ஒளிப்பதிவு செய்வார்கள் என்றும் செய்திகள் வெளியாகியது.மிகவும் சிரமப்பட்டு தான் அனைவரும் விடுதலை திரைப்படத்தில் நடித்ததாக அண்மையில் விஜய் சேதுபதியே தெரிவித்திருந்தார்.

இச்சூழ்நிலையில் சூரி பாணியில் கோட்டை எல்லாம் அழி, பஸ்ட்ல இருந்து கோட்ட போடு!?? என்று வெற்றிமாறன் சொன்னதில்  திகைத்து போய் உள்ளார் விஜய் சேதுபதி.முதல் பாகத்தில்  ஜோடி இல்லாமல் இருந்த விஜய் சேதுபதிக்கு இரண்டாம் பாகத்தில் ஜோடியாக மஞ்சு வாரியார் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே விஜய் சேதுபதிக்கு சற்று ஆறுதலான செய்தி.

Most Popular