Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலண்டன் சென்ற வெற்றிமாறன்!  வாடிவாசல் படத்திற்காக தீவிரம்

லண்டன் சென்ற வெற்றிமாறன்!  வாடிவாசல் படத்திற்காக தீவிரம்

விடுதலைத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தற்போது அடுத்த பிராஜெக்டுக்கு சென்று விட்டார். நடிகர் சூர்யாவுடன் இணைந்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணியை தொடங்கிவிட்டார்.

- Advertisement -

தற்போது காளைகளை தயார் படுத்தும் பணிக்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது லண்டன் சென்றுள்ளார். லண்டனில் வாடிவாசல் திரைப்படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதனை அவதார் படத்தை இயக்கிய நிறுவனம்தான் வாடிவாசல் திரைப்படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக தற்போது இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று இருக்கிறார். சூட்டிங் செய்யப்படாமல் எப்படி கிராபிக்ஸ் பணி நடைபெறும் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

- Advertisement -

எனினும் படத்தின் சில காட்சிகளில் கதையை கிராபிக்ஸில் சொல்வதற்காக இந்த பணி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மேலும் காளையை கிராபிக்ஸில் சில காட்சிகளில் காட்டுவதற்காக அந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சூட்டிங்கை செய்யாமல் கிராபிக்ஸ் பணி தொடங்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்திலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். இந்த படம் முடிய இன்னும் ஆறு மாதம் காலம் ஆகலாம். இதனால் கங்குவா திரைப்படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் திரைப்படத்தின் சூட்டிங் நடிகர் சூர்யா தொடங்குவார் என தெரிகிறது. ஒரு வழியாக வெற்றிமாறன் வாடிவாசல் பக்கம் திரும்பி இருப்பது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Most Popular