Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentதிரைப்பட புரொமோஷன்களுக்கு வராமல் ஏ.கே. போல் டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா… நடிகையின் கொள்கைக்கு புது விளக்கமளித்த...

திரைப்பட புரொமோஷன்களுக்கு வராமல் ஏ.கே. போல் டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா… நடிகையின் கொள்கைக்கு புது விளக்கமளித்த கணவர் விக்னேஷ் சிவன்… போதும் சாமி, ரீலு அந்துபோச்சு…

நடிகர் சரத்குமார் – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படத்திலேயே நடிப்பில் எந்த குறையும் வைக்காத நயன்தாரா, ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் பாடலின் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லங்களிலும் நுழைந்தார். ஐயா படத்தில் நடித்த சில மாதங்களிலேயே, அவருக்கு ரஜினிகாந்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா, அவருடன் கொஞ்ச நேரம் பாடலில் டூயட் பாடி அசர வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து கஜினி, வல்லவன், கள்வனின் காதலி உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நயனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது பில்லா திரைப்படம். துணிச்சலாக பெண் வேடத்தில் நடித்த அவர், நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை கிரங்கடித்தார். பிறகு, யாரடி நீ மோகினி திரைப்படமும் நயன்தாராவின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த சமயத்தில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா, சிறிது காலம் படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இதையடுத்து சிறிது இடைவேளைக்கு பிறகு, அட்லி இயக்கத்தில் எடுக்கப்பட்ட ராஜா ராணி திரைப்படத்தில் முகம் காட்டிய நயன், மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஜோராக ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வந்த நயனுக்கு, நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் அவர் தேடித்தேடி நடித்து வந்தார். இதில் கோலமாவு கோகிலா, அறம், மாயா திரைப்படங்கள் அவருக்கு கை கொடுத்தன. இதனால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.

- Advertisement -

இப்படி பெயர், புகழோடு இருக்கும் நயன்தாரா, சமீபகாலமாக எந்தவொரு படத்தின் புரொமோஷன் பணிகளுக்கும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை, படத்திற்கான எந்தவொரு முன்னெடுப்பு பணிகளிலும் கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகியது. நயன்தாரா இப்படி செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைக்க, அதையெல்லாம் அவர் கண்டுகொள்வது போன்றே தெரியவில்லை. ஒருவேளை அஜித்தின் பாணியை அவர் பின்பற்ற ஆரம்பித்து விட்டாரா என்றும் பலர் கேட்டு வந்தனர்.

நடிப்பை தாண்டி தொழிலிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வரும் நயன், 9ஸ்கின் எனும் அழகுசாதனப்பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார். இதன் அறிமுகவிழா மலேசியாவில் நடைபெற அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், தனது மனைவி திரைப்பட புரோமோஷன்களில் பங்கேற்காதது குறித்து பேசியுள்ளார். நயன்தாரா தனது சொந்த படங்களுக்கான புரொமோஷனில் கூட கலந்து கொள்ள விரும்ப மாட்டார். ஒரு விஷயம் சிறப்பாக இருந்தால் அதுவே விளம்பரப்படுத்திக்கொள்ளும் என்று அவர் நம்புகிறார் எனக் கூறி விளக்கமளித்தார்.

Most Popular