Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசாவின் விளிம்பில் இருந்தோம்.. விஜய் அண்டனி மனைவி உருக்கம்

சாவின் விளிம்பில் இருந்தோம்.. விஜய் அண்டனி மனைவி உருக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் குடும்பத்துடன் பார்க்கும் அளவுக்கு படம் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 4 1/2 கோடி ரூபாய் வரை வந்திருப்பதாக அதிகாரப்பூர் தகவல் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியப்படும் வகையில் தமிழில் விட தெலுங்கில் தான் அதிக வசூல் கிடைத்து இருக்கிறதாம்.

- Advertisement -

தெலுங்கில் முதல் நாள் வசூல் இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது பொன்னியின் செல்வன் வசூலை விட அதிகம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் நேற்று வெளியான திரைப்படங்களை விட பிச்சைக்காரன் தான் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது தாம்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனியின் மனைவியும் படத்தின் தயாரிப்பாளருமான பாத்திமா, சாவின் விளிம்பில் இருந்தும். மிகவும் கடினமான சூழலில் தான் நாங்கள் எதிர்கொண்டோம். ஆனால் ரசிகர்கள் இந்த வெற்றியின் மூலம் அனைத்தையும் மறக்கடித்து விட்டீர்கள்.

இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.தொடர்ந்து உங்களுடைய ஆதரவுகளை அளியுங்கள் என்று பாத்திமா விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

கோடை காலம் என்பதால் நேற்று வெளியான திரைப்படங்களில் பிச்சைக்காரன் மட்டும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் ரசிகர்கள் பிச்சைக்காரன் படத்தை அதிக அளவில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular