Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாமுடிவுக்கு வந்த விஜய் ரஜினி பிரச்சனை ரஜினி பேச்சால் மனம் மாறிய விஜய் ரசிகர்கள்

முடிவுக்கு வந்த விஜய் ரஜினி பிரச்சனை ரஜினி பேச்சால் மனம் மாறிய விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இடையில் சில நாட்களாக போட்டி ஏற்பட்டிருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர்   திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவின் போது கூறிய காக்கா, கழுகு கதை இந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா என்று கூறியது நடிகர் விஜய்யை தான் என்று இவர்களாகவே ஒரு வதந்தியை கிளப்பி அதை பெரிதாக்கி நடிகர் விஜய்  குறிவைத்து பேசி வந்தார்கள். ஆனால் அது எதையும் நடிகர் விஜய்யும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தற்பொழுது இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தின் உடைய நிகழ்ச்சியில் ஒரு ஏவி ஒன்றில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் நான் பார்த்து வளர்ந்தவர். தர்மத்தின் தலைவன் திரைப்படம் நான் நடிக்கும் பொழுது விஜய்க்கு ஒரு 13 வயது இருக்கும். அப்பொழுது தான் முதன் முதலில் அவருடைய தந்தை எஸ் .ஏ சந்திரசேகர் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். நடிப்பில் ஆர்வம் இருக்கிறது என்று கூறுகிறான் .படிப்பை பார்க்கச் சொல்லுங்கள் என்று என்னை அறிவுரை கூறுமாறு அவர் தந்தை கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அதன் பிறகு தன்னுடைய உழைப்பால் படிப்படியாக முன்னேறி இப்பொழு இப்படிப்பட்ட இடத்தை அடைந்திருக்கிறார் நடிகர் விஜய். அவரே பலமுறை கூறியிருக்கிறார் அவருக்கு அவர்தான் போட்டி என்றும் நானும் கூறி இருக்கிறேன் எனக்கு நான்தான் போட்டி என்றும் எங்களுக்குள் வேறு எந்த போட்டியும் கிடையாது .

அவரை போட்டியாக நினைத்தால் எனக்கு அது மரியாதை இல்லை. அதே போல் அவர் என்னை போட்டியாக நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை என்று வெளிப்படையாகவே ரசிகர்களிடம் இதுபோன்று எந்த வதந்திகளையும் கிளப்ப வேண்டாம் உங்களுக்குள் எந்த போட்டியும் வேண்டாம் என்று அன்பான வேண்டுகோளை வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அந்த காக்கா கழுகு கதையை நான் விஜய் குறி வைத்து சொல்லவில்லை என்றும் வெளிப்படையாகவே கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் .இனி ஒருபோதும் இது போன்ற சர்ச்சைகளை ரசிகர்களுக்கு இடையில் யாரும் கிளப்ப முடியாத அளவிற்கு தெளிவாக கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருக்கும் இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் மீது மரியாதை ஏற்படுத்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பதிவு அமைந்திருக்கிறது.

Most Popular