Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாவம்சியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விஜய்!

வம்சியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் மே மாதம் இறுதியில் எல்லாம் முடிந்து விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து நடிகர் விஜயின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். வழக்கம்போல் இயக்குனர் அட்லீயுடன் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அட்லி, ஷாருக்கான் படத்தில் பிசியாக இருக்கிறார். வரும் ஜூன் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு விஜயுடன் அட்லி பணியாற்றுவார் என்ற தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் தற்போது மேலும் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. வாரிசு வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் விஜயை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். விஜய் எப்போதுமே கமர்சியல் ஆக்சன் படங்களை நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார். கோபிசந்த் அண்மையில் கிராக், வீரசிம்கா ரெட்டி போன்ற பெரிய ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தான் அவர் விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து அண்மையில் நேரடியாக விஜயை சந்தித்து கதை கூறியிருக்கிறார். இது விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய் விட்டு தாம். ஒரே அமர்வில் கதையை ஓகே செய்துள்ள விஜய்,இந்த படத்தை நிச்சயம் நாம் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் லீயோ படத்திற்கு பிறகு கோபிச்சந்துடன் தான் விஜய் இணைவார் என கூறப்படுகிறது.
இதனால் அட்லி திரைப்படம் கொஞ்சம் தள்ளி போக வாய்ப்பு உள்ளது. வாரிசு கொடுத்த வெற்றியை நம்பி மீண்டும் விஜய் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular