Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாகலியுக கர்ணன் விஜயகாந்த் பொன்னம்பலம் கூறிய உண்மை சம்பவம்

கலியுக கர்ணன் விஜயகாந்த் பொன்னம்பலம் கூறிய உண்மை சம்பவம்

நடிகர் விஜயகாந்தின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் வருத்தத்தை தந்திருக்கிறது. அவரின் இறப்பை தாங்க முடியாத பலரும் அவர்கள் வாழ்வில் நடிகர் விஜயகாந்த் ஆல் பெற்ற உதவியை பற்றி கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் நடிகர் பொன்னம்பலம் நடிகர் விஜயகாந்த் நடித்த உதவி சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார்.

ஒரு ஹிந்தி பட சூட்டிங் இருக்கு வில்லன் வரவில்லை என்பதால் டுப்பாக பொன்னம்பலம் நடிக்க அழைத்திருக்கிறார்கள். அப்பொழுது பான்பராக்கை போட்டு  விஜயகாந்த் வருவதை கூட பார்க்காமல் பாதையில் துப்பி விட்டாராம் பொன்னம்பலம்

- Advertisement -

இதைப் பார்த்த விஜயகாந்த் யார் இந்த காட்டான்? என்று கேட்டிருக்கிறார். வில்லனுக்கு டுப்பாக நடிக்க வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் டுபாக ஏன் நடிக்க வேண்டும் இவரையே வில்லனாக வைத்து திரைப்படத்தை இயக்குவோம் என்று கூறி படப்பிடிப்பை தொடங்கினார் நடிகர் விஜயகாந்த்.

- Advertisement -

அதிலிருந்து தான் பொன்னம்பலம் சினிமா வாழ்க்கை துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார் .என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை கேப்டனா தான் நடந்தது  என்று கூறியிருந்தார். மேலும் அவர் உதவாத மனிதரே இல்லை என்பது போல பொன்னம்பலம்த்திற்க்கு ஒரு மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார் நடிகர் விஜயகாந்த்.

அந்த திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது பொன்னம்பலத்தினுடைய தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது அப்பொழுது பணத்தேவை ஏதாவது இருக்கிறதா என்று அவரிடம் நடிகர் விஜயகாந்த் கேட்டிருக்கிறார். இருக்கிறது என்று நேரடியாக கூறாமல் பாதியை முடித்து விட்டேன்.இன்னும் மிதிக்கு பணம் தேவைப்படுகிறது என்று ஜாடையாக கூறி இருக்கிறார் நடிகர் பொன்னம்பலம். அவரிடம் இருந்து உதவி கிடைக்கும் என்ற நோக்கத்திலும் அதை அவர் கூறவில்லை.

தங்கை திருமணத்திற்கு முதல் நாள் விஜயகாந்த்திற்கும் பொன்னம்பலத்திற்கும் ஒரு மிகப்பெரிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அந்த சமயம் அந்த சண்டைக் காட்சி முடித்துவிட்டு.

மறுநாள் காலையில் பொன்னம்பலத்தின் தங்கை திருமணத்திற்கு சென்று 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் கைகளில் கொடுத்து. இது உனது சம்பள பணம் என்று அவர் கூறியதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று பொன்னம்பலம் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது போன்ற மனிதர்கள் இனி பூமியில் எங்கு தேடினாலும் கிடைப்பது அரிது தான். கலியுக கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் விஜய்காந்த்.

Most Popular