Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் சூரியால் நான் மிகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.. மனம் திறந்து பேசிய விஷ்ணு...

நடிகர் சூரியால் நான் மிகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.. மனம் திறந்து பேசிய விஷ்ணு விஷால்…!

லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் தற்பொழுது திரைப்படத்திற்காக பல இடங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் தற்பொழுது கலாட்டா சேனலுக்கு பேட்டி கொடுத்த விஷ்ணு விஷால் நடிகர் சூரிக்கும் அவருக்கும் இடையில் இருந்த மனஸ்தாபத்தை பற்றி பேசி இருக்கிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சூரியும் , விஷ்ணு விஷாலும் சிறந்த காம்போவாக ரசிகர்களிடம் பெயர் பெற்றனர். அவர்களுடைய அந்த நகைச்சுவை ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தது.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகு விஷ்ணு விஷாலின் தந்தை நடிகர் சூரியின் நிலத்தை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்திருந்தார் நடிகர் சூரி. இதன் காரணத்தினால் விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் சூரிக்கும் இடையில்   பிளவு ஏற்பட்டது.

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் தற்பொழுது கலாட்டா சேனலில் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் தற்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது .என் வாழ்க்கையிலேயே அந்த மூன்று வருடமும் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆள் ஆனேன். என்னுடைய முதல் மனைவியும் அந்த சமயத்தில் தான் என்னை விவாகரத்து செய்தார்.

நடிகர் சூரியும் இது போல் வழக்கு பதிவு செய்து என்னை சங்கடப்படுத்தினார். ஆனால் அது எல்லா பிரச்சனையும் தற்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது. நானும் மறுமணம் செய்து கொண்டேன். தற்பொழுது நடிகர் சூரியனும் நட்பில் இருக்கிறேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.

நானும் நடிகர் சூரியும் நிறைய நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். எங்களுக்குள் நிறைய புரிதலும் கிடைத்தது. வாழ்க்கையைப் பற்றியும் புரிந்து கொண்டோம். அதற்குப் பிறகு இந்த பிரச்சனையை முடித்து நாங்கள் நட்பை ஏற்படுத்திக் கொண்டோம். விரைவில் நானும் சூரியும்  சேர்ந்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்போம் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருந்தார்.

Most Popular