Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாபாலா உடன் சூர்யா பிரிந்தது ஏன்? வணங்கான் நடிகை பரபரப்பு கருத்து

பாலா உடன் சூர்யா பிரிந்தது ஏன்? வணங்கான் நடிகை பரபரப்பு கருத்து

சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் இயக்குனர் பாலாவின் பங்கு மிகவும் முக்கியமானது கருதப்படுகிறது. நந்தா திரைப்படத்தின் மூலம் தான் சூர்யாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறது. அவரும் நடிகர் தான் என்று தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது.

- Advertisement -

இதனால் இயக்குனர் பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கிறது. பல பிரச்சனைகள் காரணமாக பாலாவுக்கு எந்த படமும் கிடைக்காத நிலையில் மீண்டும் சூர்யா பாலாவுடன் இணைய ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

சூர்யாவுக்கு ஏற்கனவே பல படங்கள் வரிசையில் இருந்த நிலையில், வணங்கான் என்ற திரைப்படத்தை நடிகர் சூர்யா பாலா உடன் இணைந்து நடித்தார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாகவும் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து எடுப்பதாகவும் பாலா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து விலகிய நடிகை கீர்த்தி செட்டி தான் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார்.

படத்தின் கதையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது சூர்யாவுக்கு ஏற்ற கதையாக இருக்காது என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தான் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். மற்றபடி சூர்யாவுக்கும் பாலாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள்.

இந்த படம் தள்ளிப் போனதன் காரணமாக நான் மற்ற படங்களில் நடிக்க சென்று விட்டேன்.இதன் காரணமாக எனக்கும் தேதி பிரச்சினை ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் மற்றபடி இயக்குனர் பாலா எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கீர்த்தி செட்டி கூறியுள்ளார்.

Most Popular