Sunday, April 28, 2024
- Advertisement -
HomeUncategorizedவீடியோ- யோகி பாபுக்கு கை கொடுக்க மறுக்கம் அர்ச்சகர்.. தீண்டாமை என புகார்

வீடியோ- யோகி பாபுக்கு கை கொடுக்க மறுக்கம் அர்ச்சகர்.. தீண்டாமை என புகார்

தமிழ் சினிமாவின் தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகராக  இருப்பவர் தான் யோகி பாபு. சாதாரண துணை நடிகராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி சீரியலில் நடித்து பிறகு சினிமாவில் தற்போது உச்சபட்ச காமெடி நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

ஹீரோயின் கூட இல்லாமல் படம் வருகிறது. கதை கூட இல்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் யோகி பாபு இல்லாமல் திரைப்படம் எதுவுமே ரிலீஸ் ஆவது இல்லை. அந்த அளவிற்கு யோகி பாபு காமெடியில் உச்சபட்ச நடிகராக இருக்கிறார்.

விஜய் ரஜினி உள்ளிட்ட உச்ச நடிகர்களின் படங்களின் நடிக்கும் யோகி பாபு தற்போது ஜவான் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார்.இதனால் ஹிந்திக்கு சென்ற முதல் தமிழ் காமெடி நடிகர் என்ற பெருமையும் யோகி பாபு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் யோகி பாபு கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டி வருவதால் தோனியின் நட்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இப்படி பல பெருமைகளை யோகி பாபு பெற்றிருந்தாலும் அவருக்கும் தீண்டாமை போன்ற கொடுமையான விஷயங்கள் நடைபெறுகிறது.

- Advertisement -

எப்போது பிரபலங்களை பார்த்து தான் பலரும் போட்டோ எடுத்து கைகுலுக்குவார்கள். இந்த நிலையில் யோகி பாபு கோயிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு பக்தர்கள் மரியாதை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவரிடம் சென்று யோகி பாபு பேசினார். அப்போது அவரிடம் கை கொடுக்க சென்ற போது திடீரென்று அர்ச்சகர் கையை கொடுக்காமல் விலக்கிக் கொண்டார்.

எனினும் இதனை புரிந்து கொண்ட யோகி பாபு அர்ச்சகர்ரிடம் ஏதோ பேசினார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. யோகி பாபு போன்ற பிரபலங்களுக்கு இந்த நிலை தான் ஏற்படுகிறது என்று ரசிகர் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

Most Popular