Sunday, May 12, 2024
- Advertisement -
HomeEntertainmentசுறா படப்பிடிப்புக்கு சென்ற அஜித் குமார்.. மங்காத்தாவுக்கு முன்பே நடந்த சந்திப்பு.. அஜித் கெட்டப்ப தான்...

சுறா படப்பிடிப்புக்கு சென்ற அஜித் குமார்.. மங்காத்தாவுக்கு முன்பே நடந்த சந்திப்பு.. அஜித் கெட்டப்ப தான் மாஸ்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் – அஜித் குமார். இருவருக்கும் எந்த அளவிற்கு போட்டி இருக்கிறதோ, அதே அளவிற்கு நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் நட்பு பொதுவெளியில் வெளிப்படுத்தியதே இல்லை. ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பின் இருவரும் சந்திப்பதே ஆச்சரியமான நிகழ்வாக மாறிப்போனது.

- Advertisement -

இதனால் சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இதற்கு ரஜினி – கமல் போல் இரு தரப்பு ரசிகர்கள் நேரில் சந்தித்து நட்பு பாராட்டாததும் முக்கியக் காரணமாக மாறியது. இந்த சூழலில் தான் மங்காத்தா – வேலாயுதம் படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது அஜித் குமார் இரு தரப்பு படக்குழுவினருக்கும் பிரியாணி சமைத்து பரிமாற, மறுபுறம் விஜய் தனது வாட்ச்-சை பரிசாக வழங்கி பாராட்டினார். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் சிறிது நாட்கள் அமைதியாக இருந்தனர். தொடர்ந்து வீரம் படம் நல்லாருப்பதாக விஜய் கருத்து தெரிவித்தார்.

- Advertisement -
Ajith Vijay

அதேபோல் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் அஜித்குமார் போல் கோட்சூட் அணிந்தேன் என்று விஜய் கூறியது இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தியது. அதேபோல் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் உயிரிழப்பிற்கு விஜய் நேரடியாக சென்று தனது ஆறுதலை அஜித் குமாருக்கு கூறினார். இதனால் விஜய் – அஜித் இடையே நல்ல நட்பு இருந்து வருவதை ரசிகர்களும் புரிந்துகொண்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜயின் 50வது படமான சுறா படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பின் போது அஜித் குமார் சென்று விஜயை சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular