Sunday, May 19, 2024
- Advertisement -
HomeEntertainmentசெருப்பு கூட போடல.. விஜயகாந்த் எப்படி என்னை பெண் பார்க்க வந்தாரு தெரியுமா.. ஹனிமூன் போன...

செருப்பு கூட போடல.. விஜயகாந்த் எப்படி என்னை பெண் பார்க்க வந்தாரு தெரியுமா.. ஹனிமூன் போன கதைலாம் சொன்ன சிரிப்பா இருக்கும்.. பிரேமலதா விஜயகாந்த் ஷேரிங்ஸ்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் அசாத்தியமான போட்டியை கொடுத்தவர் விஜய்காந்த். பெரிய நிறமோ, உடல்வாகோ, ஸ்டைலோ தனித்துவமாக எதுவும் இல்லையென்றாலும், மக்களில் ஒருவராக இருந்து சினிமாவில் ஜெயித்து காட்டியவர் விஜயகாந்த். ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

- Advertisement -

இன்றைய உச்ச நட்சத்திரங்களான விஜய், சூர்யா உள்ளிட்டோருக்கு அடையாளம் கொடுத்தவர் விஜயகாந்த். சினிமா மட்டுமல்லாமல் கடனில் இருந்த தமிழ் சினிமா நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து சிறந்த நிர்வாகத்தை செய்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல் பிறந்தநாளன்று உதவிகளை செய்யாமல், எல்லா நேரங்களிலும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவியவர்.

எந்த நேரமும் அலுவலகத்திற்கு யார் வந்தாலும் வயிறார சாப்பாடு போட்டவர். இப்படி விஜயகாந்த் பற்றி ஏராளமான நல்ல பண்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்காகவே சினிமா நடிகைகள் பலரும் விஜயகாந்த் பின்னால் சுற்றிய கதைகளும் உண்டு. ஆனால் விஜயகாந்த் பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட பெண்ணை தான் மணமுடித்தார். பிரேலமதாவை கரம்பிடித்த விஜயகாந்த், எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர்.

- Advertisement -
Captain

 இந்த நிலையில் விஜயகாந்த் தன்னை பெண் பார்க்க வந்த சம்பவம் குறித்து பிரேமலதா முதல்முறையாக பேசி இருக்கிறார். அதில், எங்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட ஒன்று தான். நான் கல்லூர் படிப்பை முடித்த பின் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விஜயகாந்த் என்னை பெண் பார்க்க வரப் போகிறார் என்றதும் எங்கள் வீட்டில் தாம் தூம் என்று வரவேற்க தயாராகினார்கள்.

- Advertisement -

ஆனால் என்னை பெண் வந்த போது அவர், காலில் செருப்பு கூட அணியவில்லை. சாமிக்கு மாலை போட்டிருந்ததால், என்னை பார்ப்பதற்கு முன் மாலை போட்டு பெண் பார்க்கலாமா என்ற வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்டார். என்னடா இது, இவ்வளவு பெரிய ஹீரோ, இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எல்லோருமே வியந்துவிட்டோம். அங்கேயே எனக்கும் பிடித்துவிட்டது.

அதேபோல் எங்கள் திருமணம் நடைபெற்ற போது விஜயகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். அதனால் 3 நாட்கள் மட்டுமே திருமணத்திற்கு விடுமுறை கிடைத்தது. அதனால் எங்களின் ஹனிமூன் எங்கே என்று கேட்ட போது, ஊட்டிக்கு ஷூட்டிங் போகிறேன்.. அங்கேயே வைத்துக் கொள்வோம் என்று கூட்டிச் சென்றுவிட்டார். கேப்டன் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பார். வீட்டில், வெளியில் என்று வேறு வேறு முகங்கள் அவருக்கு எப்போதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Most Popular