Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentதனி ஒருவன் 2, வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு… இப்படி ஒரு ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்த்து...

தனி ஒருவன் 2, வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு… இப்படி ஒரு ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்க… மோகன் ராஜாவின் பலே திட்டம்

நடிகர் ஜெயம் ரவி, அவரது அண்ணன் மோகன் ராஜா கூட்டணியில் வெளியான ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என அனைத்து திரைப்படங்களும் வெற்றி வாகை சூடின. தனது தம்பியுடன், ஐந்து படங்களைத் தொடர்ந்து இயக்கி விட்டதால், அடுத்த நடிகரை நோக்கி நகர்ந்த மோகன் ராஜா, விஜய்யை வைத்து வேலாயுதம் திரைப்படத்தை எடுத்தார்.

- Advertisement -

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஓரளவு வசூல் செய்தது. அந்த சமயத்தில் மோகன் ராஜா சொந்தக் கதையை கொண்டு படம் இருப்பதில்லை என்றும், ரீமேக் மட்டுமே செய்து வருவதாகவும் இணையத்தில் பலர் கடிந்து கொண்டனர். இந்த வசவுகளுக்கு திருப்பி பதில் கொடுக்கும் வகையில், திரைக்கதையை வடிவமைத்தார் மோகன் ராஜா.

இதில் ஹீரோவாக தன் தம்பி ஜெயம் ரவியை சேர்க்க, நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, 2015 ஆம் ஆண்டு வெளியானது தனி ஒருவன் திரைப்படம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த தனி ஒருவன், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் திரைக்கதையை கச்சிதமாக வடிவமைத்திருந்த மோகன் ராஜா, கதாநாயகனுக்கு ஒரு படி மேல் வில்லன் கேரக்டரை எழுதியிருந்தார். இதற்கு அரவிந்த்சாமியும் சரியாகப் பொருந்த, தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யுவை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

- Advertisement -
Aravind Swamy

இப்படி ஒரு திரைக்கதையை வைத்து விட்டா, இவர் இத்தனை நாட்கள் ரீமேக் படத்தை இயக்கினார் பலரும் கேள்வி கேட்க, மோகன் ராஜா முதன்முறையாக கொண்டாடப்பட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணியில் வேலைக்காரன் படத்தை இயக்கினார் மோகன் ராஜா. ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து தனி ஒருவன் திரைப்படத்தை தெலுங்கில் ராம்சரணை வைத்து ரீமேக் செய்த மோகன் ராஜா, இப்போது அந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வீடியோவுடன் வெளியானது. தனி ஒருவன் முதல் பாகத்தில், உன் எதிரி யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதில், நீ யாரென்று சொல் உன் எதிரி யார் என்று சொல்கிறேன் என்ற வசனத்தை மோகன் ராஜா வைத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் ஜெயம் ரவியை பார்த்து, எதிரி உன்னை தேடி வருவான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்று கேள்விக்குறி பெரிதாகியுள்ளது. சித்தார்த் அபிமன்யுவுக்கு இணையாக யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்று இனையவாசிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது அதற்கு ஒரு சின்ன பதில் கிடைத்துள்ளது.

அதாவது படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் வாழ்ந்த அரவிந்த்சாமி இறப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் அரவிந்த்சாமியின் மரணத்திற்கு பழிவாங்க அவரது மகன் அரவிந்த்சாமி ஆகவே நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லது வில்லன் கதாபாத்திரம் இரட்டை சகோதரர்களாக இருந்து அதில் ஒருவர் ஜெயம் ரவியை பழிவாங்க திரும்புவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Most Popular