Wednesday, May 15, 2024
- Advertisement -
HomeEntertainmentதுல்கர் சல்மான், விஜய் சேதுபதி-லாம் இல்லையாம்.. வாரிசு நடிகர் தான் ஹீரோவாம்.. நாயகனை முடிவு செய்த...

துல்கர் சல்மான், விஜய் சேதுபதி-லாம் இல்லையாம்.. வாரிசு நடிகர் தான் ஹீரோவாம்.. நாயகனை முடிவு செய்த சஞ்சய் விஜய்

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மா மூலமாக அறிமுகமானார். அதன்பின் மஹான் படத்தில் நடித்த துருவ் விக்ரம், பின்னர் எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையப்படுத்தி உருவாகவுள்ள படத்திற்காக துருவ் விக்ரம் தயாராகி வருகிறார்.

- Advertisement -

இதற்காக உடலளவில் மட்டுமல்லாமல் கபடி வீரர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளி வந்துள்ளது. விக்ரம் மகன் துருவும், விஜய் மகன் சஞ்சயும் நீண்ட ஆண்டுகளாக நட்பில் இருந்து வருகின்றனர். இந்த கேங்கில் ஏஆர் ரஹ்மான் மகன் ஏஆர் அமீனும் உள்ளார்.

இதனிடையே வெளிநாட்டில் படிப்பை முடித்த சஞ்சய், லைகா நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் சஞ்சய் இருக்கிறார். இவருக்கு உதவியாக விஜயை வைத்து சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் இருந்து வருகிறார். லைகா நிறுவனத்திற்கு திருப்தியளிக்கும் வகையில் திரைக்கதை உருவாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் சஞ்சய் மற்றும் ஜான் மகேந்திரன் இருவரும் இணைந்து தொழிற்நுட்ப குழு மற்றும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடிகர் துருவ் விக்ரமிடம் சஞ்சய் கதை கூறியிருப்பதாகவும், அந்த கதை துருவ் மற்றும் நடிகர் விக்ரம் இருவருக்கும் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதனால் விஜய் வாரிசான சஞ்சய், விக்ரமின் வாரிசான துருவ் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றவுள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

Most Popular