Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentதிருப்பதி சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன்.. புஷ்பா - 2 அதிரடி ட்விஸ்ட்.. ஏப்ரல் 7ல்...

திருப்பதி சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன்.. புஷ்பா – 2 அதிரடி ட்விஸ்ட்.. ஏப்ரல் 7ல் டீசர்.. படக்குழு அறிவிப்பு!

சுகுமார் இயக்கத்தில் உருவாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியான இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. பாகுபலி படத்திற்கு பின்னர் பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் பெற்றது.   

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் எவ்வளவுக்கு எவ்வளவு ஹிட் ஆனதோ அதே அளவு சென்சேஷ்னல் ஹிட்டானது ஊ சொல்றியா மாமா பாடல்தான். தற்போது உருவாகும் புஷ்பா 2 படத்திலும் அதேபோல் ஒரு நடனம் ஆடுவதற்கு சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் முக்கியமான அப்டேட் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி நாயகி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளான இன்று, டீஸருக்கான கிளிப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

அதன் பின்னர் சிறையில் இருந்து தப்பிக்கும் அல்லு அர்ஜூனை பிடிக்க போலீஸார் முயற்சிப்பதாக அந்த டீஸர் முடிவடைகிறது. அதேபோல் புஷ்பா ரூல்-க்கு முன்னதாக புஷ்பா ஹண்ட் என்ற ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் புஷ்பா – 2வில் அல்லு அர்ஜூன் சில நாட்கள் காவல்துறைக்கு அஞ்சி காட்டில் வாழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Most Popular