Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentடான் இயக்குநரின் அடுத்த படம்.. தப்பித்த சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய நடிகர் நானி!

டான் இயக்குநரின் அடுத்த படம்.. தப்பித்த சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய நடிகர் நானி!

டாக்டர் படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு டான் படம் பெரும் வெற்றியை கொடுத்தது. லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டான் படம் ரூ.100 கோடி வசூலித்ததாக அறிவித்தது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் மீண்டும் உச்சம் பெற்றது. விமர்சன ரீதியாக மோசமாக இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பியது.

- Advertisement -

டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார். அதன்பின் ரஜினிக்கு கதை சொன்ன அவர், விரைவில் ரஜினி படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த் ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் நொந்துபோன இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, உடனடியாக சிவகார்த்திகேயனுக்காக இன்னொரு கதையை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியது. இதன்பின் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள, மீண்டும் டான் கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் அதற்கான எந்த தகவலையும் யாரும் உறுதி செய்யவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தமிழில் எந்த ஹீரோக்களும் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் நட்சத்திரமான நடிகர் நானிக்கு, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஒரு மசாலா கதையை கூறியுள்ளார். அந்த கதை பிடித்துபோக, உடனடியாக ஓகே சொல்லி இருக்கிறார் நானி.

- Advertisement -

இதனால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் படத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தசரா படம் கொடுத்த வெற்றிக்கு பின் பான் இந்தியா பாணியிலான படங்களில் நானி கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சிபி சக்கரவர்த்தின் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

Most Popular